பதிவு செய்த நாள்
20 மே2012
00:16
புதுடில்லி:சென்ற ஏப்ரலில், நாட்டின் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி, 100 கோடி டாலராக (5,000 கோடி ரூபாய்) சற்று குறைந்துள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, 1 சதவீதம் குறைவாகும் என, ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.நாட்டின் மொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதியில், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பங்களிப்பு, 65 சதவீதம் என்றளவில் உள்ளது.கணக்கீட்டிற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட ஏப்ரல் மாதத்தில், இந்திய ஆயத்த ஆடைகளுக்கான தேவைப்பாடு, ஐரோப்பிய நாடுகளில் குறைந்துள்ளது.
மேலும், புதிய சந்தைகளாக கண்டறியப்பட்டுள்ள, ஜப்பான், ரஷ்யா மற்றும் தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளிலிருந்து, ஆயத்த ஆடைகளுக்கு குறைந்த அளவிலேயே ஆர்டர்கள் பெறப்பட்டுள்ளன.நடப்பு 2012-13ம் நிதியாண்டில், ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி வளர்ச்சி, 10-15 சதவீதம் என்றளவில் தான் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றின் ஏற்றுமதி, சென்ற 2011-12ம் நிதியாண்டில், 18 சதவீதம் வளர்ச்சிகண்டு, 1,360 கோடி டாலராக (68 ஆயிரம் கோடி ரூபாய்) இருந்தது.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|