பதிவு செய்த நாள்
20 மே2012
00:18
மும்பை:நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு, சென்ற 11ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 137 கோடி டாலர் சரிவடைந்து, 29 ஆயிரத்து 180 கோடி டாலராக (14 லட்சத்து 59 ஆயிரம் கோடி ரூபாய்) குறைந்துள்ளது.இது, இதற்கு முந்தைய வாரத்தில், 143 கோடி டாலர் (7,150 கோடி ரூபாய்) குறைந்து, 29 ஆயிரத்து 317 கோடி டாலராக (14 லட்சத்து 65 ஆயிரத்து 850 கோடி ரூபாய்) இருந்தது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே வாரத்தில், அன்னிய செலாவணிகளின் சொத்து மதிப்பு, 132.90 கோடி டாலர் என்றளவிலும், சர்வதேச நிதியத்தில், நம் நாடு வைத்துள்ள செலாவணிகளின் மதிப்பு, 1.67 கோடி டாலர் என்றளவிலும் குறைந்துள்ளது.சென்ற 2011-12ம் நிதியாண்டின், செப்டம்பர் முதல் வாரத்தில், அன்னிய செலாவணி கையிருப்பு, 32 ஆயிரம் கோடி டாலர் என்றளவில் மிகவும் அதிகரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.அமெரிக்க டாலருக்கு எதிரான, யூரோ, ஸ்டெர்லிங், யென் உள்ளிட்ட இதர நாட்டு செலாவணிகளின் வெளிமதிப்பு மாறுபட்டதையடுத்து, கையிருப்பில் உள்ள அன்னியச் செலாவணியின் மதிப்பு குறைந்துள்ளதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|