பதிவு செய்த நாள்
20 மே2012
00:21
மும்பை:நடப்பாண்டின் ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான, நான்கு மாத காலத்தில், உள்நாட்டில் விமான பயணம் மேற்கொண்டோர் எண்ணிக்கை, 2.03 கோடியாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே மாதங்களில் மேற்கொண்ட பயணிகளின் எண்ணிக்கையை விட, 7.15 சதவீதம் (1.90 கோடி பேர்) அதிகம் என, உள்நாட்டு விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது.சென்ற ஏப்ரல் மாதத்தில், உள்நாட்டு விமான சேவையில், அதிக பயணிகளை கையாண்டதில், ஜெட் ஏர்வேஸ் மற்றும் ஜெட் லைட் நிறுவனங்கள் முதல் இடத்தில் உள்ளன.
இந்நிறுவனங்களின் ஒட்டு மொத்த சந்தை பங்களிப்பு, 28.2 சதவீதம் என்றளவில் உள்ளது.இதைத் தொடர்ந்து, இண்டிகோ (23.8 சதவீதம்), ஏர்-இந்தியா (17.6 சதவீதம்), கோ ஏர் (7.3 சதவீதம்) மற்றும் கிங்பிஷர் (5.4 சதவீதம்) ஆகிய நிறுவனங்கள் உள்ளன. மதிப்பீட்டு காலத்தில், மேற்கண்ட விமான பயணங்களில், இண்டிகோ நிறுவனத்தின் இருக்கைகள், 82 சதவீத அளவிற்கு பூர்த்தியாகியுள்ளன. இது, இதற்கு முந்தைய மார்ச் மாதத்தில், 76.5 சதவீதமாக இருந்தது.சென்ற ஏப்ரலில், ஏர்-இந்தியா நிறுவனத்தின் பணியாளர்கள் வேலை நிறுத்தம் மேற்கொள்ளாத நிலையிலும், 5.2 சதவீத அளவிற்கு, இந்நிறுவனத்தின் உள்நாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கிங்பிஷர் நிறுவனத்தின் விமான சேவை, 3.3 சதவீத அளவிற்கும், இண்டிகோ மற்றும் கோ ஏர் நிறுவனங்களின் சேவை, தலா, 1 சதவீத அளவிற்கும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|