நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு ரூ.6,850 கோடி குறைவுநாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு ரூ.6,850 கோடி குறைவு ... ஸ்பெஷாலிட்டி ரெஸ்டாரெண்ட்ஸ் பங்குகள் வேண்டி 2.5 மடங்கிற்கு விண்ணப்பம் ஸ்பெஷாலிட்டி ரெஸ்டாரெண்ட்ஸ் பங்குகள் வேண்டி 2.5 மடங்கிற்கு விண்ணப்பம் ...
உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை 2 கோடியாக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2012
00:21

மும்பை:நடப்பாண்டின் ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான, நான்கு மாத காலத்தில், உள்நாட்டில் விமான பயணம் மேற்கொண்டோர் எண்ணிக்கை, 2.03 கோடியாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே மாதங்களில் மேற்கொண்ட பயணிகளின் எண்ணிக்கையை விட, 7.15 சதவீதம் (1.90 கோடி பேர்) அதிகம் என, உள்நாட்டு விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது.சென்ற ஏப்ரல் மாதத்தில், உள்நாட்டு விமான சேவையில், அதிக பயணிகளை கையாண்டதில், ஜெட் ஏர்வேஸ் மற்றும் ஜெட் லைட் நிறுவனங்கள் முதல் இடத்தில் உள்ளன.
இந்நிறுவனங்களின் ஒட்டு மொத்த சந்தை பங்களிப்பு, 28.2 சதவீதம் என்றளவில் உள்ளது.இதைத் தொடர்ந்து, இண்டிகோ (23.8 சதவீதம்), ஏர்-இந்தியா (17.6 சதவீதம்), கோ ஏர் (7.3 சதவீதம்) மற்றும் கிங்பிஷர் (5.4 சதவீதம்) ஆகிய நிறுவனங்கள் உள்ளன. மதிப்பீட்டு காலத்தில், மேற்கண்ட விமான பயணங்களில், இண்டிகோ நிறுவனத்தின் இருக்கைகள், 82 சதவீத அளவிற்கு பூர்த்தியாகியுள்ளன. இது, இதற்கு முந்தைய மார்ச் மாதத்தில், 76.5 சதவீதமாக இருந்தது.சென்ற ஏப்ரலில், ஏர்-இந்தியா நிறுவனத்தின் பணியாளர்கள் வேலை நிறுத்தம் மேற்கொள்ளாத நிலையிலும், 5.2 சதவீத அளவிற்கு, இந்நிறுவனத்தின் உள்நாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கிங்பிஷர் நிறுவனத்தின் விமான சேவை, 3.3 சதவீத அளவிற்கும், இண்டிகோ மற்றும் கோ ஏர் நிறுவனங்களின் சேவை, தலா, 1 சதவீத அளவிற்கும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)