உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை 2 கோடியாக உயர்வுஉள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை 2 கோடியாக உயர்வு ... சென்ற 2011-12ம் நிதியாண்டில்வங்கிகளின் வசூலாகாத கடன் ரூ.60,100 கோடியாக உயர்வு சென்ற 2011-12ம் நிதியாண்டில்வங்கிகளின் வசூலாகாத கடன் ரூ.60,100 கோடியாக உயர்வு ...
ஸ்பெஷாலிட்டி ரெஸ்டாரெண்ட்ஸ் பங்குகள் வேண்டி 2.5 மடங்கிற்கு விண்ணப்பம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2012
00:22

மும்பை:உணவக வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் ஸ்பெஷாலிட்டி ரெஸ்டாரெண்ட்ஸ் நிறுவனம், அதன் விரிவாக்க நடவடிக்கைகளுக்கு தேவையான பகுதி நிதியை திரட்டி கொள்வதற்காக, பொதுமக்களுக்கு பங்குகளை வெளியிட்டு மூலதனச் சந்தையில் களமிறங்கியது. இதன் பங்கு வெளியீடு, சென்ற புதன்கிழமை துவங்கி, வெள்ளியுடன் நிறைவடைந்தது.
இந்நிறுவனத்தின் பங்குகள் வேண்டி 2.54 மடங்கிற்கு விண்ணப்பங்கள் வந்துள்ளதாக, தேசிய பங்குச் சந்தை வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிறுவனம், 1.17 கோடி பங்குகளை வெளியிட்டு, 182 கோடி ரூபாயை திரட்டும் வகையில், மூலதனச் சந்தையில் களமிறங்கியது. பங்கு ஒன்றை 146-155 ரூபாய் என்றளவில் வெளியிட்டது. இந்நிலையில், இந்நிறுவனத்திற்கு, 2.53 கோடி பங்குகள் வேண்டி விண்ணப்பங்கள் வந்துள்ளன.தகுதி வாய்ந்த நிதி நிறுவனங்களிடமிருந்து, 4.68 மடங்கிற்கும், நிதி நிறுவனங்கள் அல்லாத பிரிவினரிடமிருந்து, 2.19 மடங்கிற்கும், சில்லரை முதலீட்டாளர்களிடமிருந்து, 0.55 மடங்கிற்கும் விண்ணப்பங்கள் வந்துள்ளன.
பங்குச் சந்தை நிலவரம் நன்கு இல்லாததால், அண்மையில், பங்கு வெளியீட்டை மேற்கொண்ட பல நிறுவனங்களின் பங்குகளுக்கு போதிய அளவிற்கு ஆதரவு இல்லாததால், பங்கு வெளியீடு விலக்கி கொள்ளப்பட்டது. இவ்வகையில், நடப்பாண்டில், பங்கு வெளியீட்டை மேற்கொண்ட 8 நிறுவனங்களில், சம்வர்தனா மதர்சன் øபானன்ஸ், குட்வில் ஹாஸ்பிட்டல்ஸ், பிளாஸ்டின் இந்தியா மற்றும் கேலக்ஸி சர்பெக்டன்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்கு வெளியீடுகள் விலக்கி கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)