சென்ற 2011-12ம் நிதியாண்டில்வங்கிகளின் வசூலாகாத கடன் ரூ.60,100 கோடியாக உயர்வுசென்ற 2011-12ம் நிதியாண்டில்வங்கிகளின் வசூலாகாத கடன் ரூ.60,100 கோடியாக உயர்வு ... ஏர் இந்தியாவுக்கு ரூ.200 கோடி நஷ்டம் ஏர் இந்தியாவுக்கு ரூ.200 கோடி நஷ்டம் ...
நாட்டின் தனிநபர் கடன் ரூ.33,000 ஆக அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2012
00:28

புதுடில்லி:கடந்த 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் தனிநபர் கடன், 32 ஆயிரத்து 812 ரூபாயாக அதிகரித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது, நாட்டின் மொத்த தனிநபர் வருவாயில், 50 சதவீதத்திற்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
தனிநபர் வருவாய்,தற்போதைய விலைவாசி அடிப்படையில், நாட்டின் தனிநபர் வருவாய், 60 ஆயிரத்து 972 ரூபாயாக உள்ளது. இது, முந்தைய நிதியாண்டை விட, 14 சதவீதம் அதிகமாகும். என்றாலும், நாட்டின் தனிநபர் கடன், முந்தைய நிதியாண்டை விட, சென்ற நிதியாண்டில், 23 சதவீதம் அதிகரித்துள்ளது.
மத்திய அரசின், வருவாய் குறைந்து வரும் அதே நேரத்தில், மானிய சுமை மற்றும் செலவினங்கள் அதிகரித்து வருகிறது. இதை ஈடுசெய்யும் வகையில், மத்திய அரசு, வெளிநாடுகளிலிருந்து கடன் வாங்குகிறது. இதேபோன்று, தனியார் நிறுவனங்களும், வெளிநாடுகளிலிருந்து குறைந்த வட்டியில், கடன் வாங்குகின்றன.
மத்திய நிதியமைச்சகத்தின் புள்ளி விவரத்தின் படி, சென்ற மார்ச் வரையிலுமாக, அரசின் தனிநபர் கடன், 33 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே மாதம் வரையிலுமாக, 26 ஆயிரத்து 600 ரூபாயாக இருந்தது.
சிறு சேமிப்பு:மத்திய அரசு, வெளி நாடுகளிலிருந்து மட்டுமின்றி, உள்நாட்டு சந்தைகளில் இருந்து, சிறு சேமிப்பு, தேசிய சேமிப்பு திட்டம் மற்றும் பொது வருங்கால வைப்பு நிதியம் போன்றவற்றிலிருந்தும் கடன் பெறுகிறது.பல்வேறு ஆய்வு நிறுவனங்கள், பல நாடுகளின் கடன் குறித்து அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு வருகின்றன. இவ்வகையில், மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்தியாவின் கடன் குறைவாகவே உள்ளது என கூறப்படுகிறது.
சர்வதேச நிதியத்தின் ஆய்வு படி, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், கடன், 67 சதவீதம் என்றளவில் உள்ளது. இது, 'பிரிக்ஸ்' நாடுகளை விட அதிகம். ஆனால், போர்ச்சுகல், அயர்லாந்து, கிரீஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளின் கடனை விட, குறைவு என, இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.இந்தியாவின் கடன் அதிகரித்து வருவதால், வட்டி செலவினமும் கூடி வருகிறது. மத்திய அரசு, அதன் பட்ஜெட்டில், வட்டி செலவினத்திற்காக, 2 லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இது, மத்திய அரசின் மொத்த செலவினத்தில், 18.45 சதவீதம் என்றளவில் உள்ளது.
மானிய செலவு:இந்நிலையில், பல பொருளாதார வல்லுநர்கள், மத்திய அரசு, வட்டி செலவினத்தையும், மானிய செலவினத்தையும் குறைக்க வேண்டும் என கூறி வருகின்றனர். அவ்வாறு குறைக்கப்பட்டால், அந்த நிதியை கொண்டு, பல்வேறு சமூக மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முடியும் என, அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)