நாட்டின் தனிநபர் கடன் ரூ.33,000 ஆக அதிகரிப்புநாட்டின் தனிநபர் கடன் ரூ.33,000 ஆக அதிகரிப்பு ... ஏர் இந்தியாவுக்கு ரூ.200 கோடி நஷ்டம் ஏர் இந்தியாவுக்கு ரூ.200 கோடி நஷ்டம் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
தொடர்ந்து மந்த நிலையில் பங்கு வர்த்தகம் :- சேதுராமன் சாத்தப்பன் -
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2012
00:42

நாட்டின் பங்கு வர்த்தகம் தொடர்ந்து, மோசமாகவே உள்ளது. நடப்பு வாரத்தில், வியாழன் வரை, பங்கு வர்த்தகம் 12 சதவீதம் சரிவடைந்துள்ளது. பல நிறுவனங்கள், சென்ற நிதியாண்டிற்கான நிதி நிலை அறிக்கையை வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் (எஸ்.பீ.ஐ.) சென்ற நிதியாண்டிற்கான நிதி நிலை முடிவு சிறப்பாக வந்துள்ளது. இதையடுத்து, வெள்ளியன்று 300 புள்ளிகளுக்கும் மேல் சரிவடைந்திருந்த 'சென்செக்ஸ்', வர்த்தகம் முடியும் போது இழப்புகளை ஈடு செய்து மேலே சென்று முடிவடைந்தது.
காலாண்டு முடிவுகள்:கடந்த நிதியாண்டில், பல நிறுவனங்களின் லாப வரம்பு குறைந்துள்ளது. ஆனால், எஸ்.பீ.ஐ.யின் காலாண்டு முடிவுகள் சிறப்பாக உள்ளது. குறிப்பாக, வங்கியின் லாபம் மற்றும் கடன் வளர்ச்சி மேம்பட்டுள்ளது.
வங்கியின் வசூலாகாத கடன் குறைந்துள்ளதுடன், நான்காவது காலாண்டில், லாபம் 4,050 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
வெள்ளியன்று மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'சென்செக்ஸ்' 82 புள்ளிகள் அதிகரித்து, 16,153 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிப்டி' 21 புள்ளிகள் உயர்ந்து, 4,891 புள்ளிகளிலும் நிலை கொண்டன. இருப்பினும் ஒட்டு மொத்த அளவில், 'சென்செக்ஸ்' 63 புள்ளிகளை இழந்துள்ளது.
புதிய பங்கு வெளியீடுகள்கடந்த ஒரு சில மாதங்களாக ,சில புதிய பங்கு வெளியீடுகள் தப்பித்தோம், பிழைத்தோம் என்று செலுத்தப்பட்டுள்ளன. ஒரு சில நிறுவனங்கள் ஆதரவு இல்லாததால் பங்கு வெளியீட்டை விலக்கி கொண்டன. இந்நிலையில், அமெரிக்காவில் பங்கு வெளியீட்டை மேற்கொண்ட பேஸ்புக் நிறுவனத்தின் பங்கு வெளியீட்டிற்கு அமோக ஆதரவு கிடைத்தது.
இதையடுத்து, இந்நிறுவனம், பங்கின் வெளியீட்டு விலையை 38 டாலராக நிர்ணயித்தது. இதன் பங்குகள், வெள்ளியன்று, நாஸ்டாக் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டன. ஆனால், இதன் பங்கின் விலை வர்த்தகம் முடியும் போது 38.23 டாலருக்கு கைமாறியது.
இதன் பங்கின் விலை மிகவும் உயரும் என எதிர்பார்த்து காத்திருந்த முதலீட்டாளர்களுக்கு இது ஏமாற்றம் அளித்தது.
பரிந்துரை:உள்நாட்டில், பங்கு வர்த்தகம் சுணக்கம் கண்டுள்ள நிலையிலும், ஆஸ்ட்ரா ஜெனிக்கா பார்மா, சி.இ.எஸ்.சி., ஐ.டி.சி., டிஷ் டிவி, ஜெட் ஏர்வேஸ், கோத்ரெஜ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ், எல் அண்டு டி ஆகிய நிறுவனப் பங்குகளின் விலை கூடி வருகிறது. இவற்றுள் ஒரு சில நிறுவனப் பங்குகளை வாங்கலாம் என முன்பு பரிந்துரை செய்துள்ளோம்.பெட்ரோல் விலை உயர்த்தப்படும் என கூறப்பட்டு வருகிறது. டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. இதை வைத்து பார்க்கையில், ஒரு லிட்டருக்கு 4 ரூபாய் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டால், அது மற்ற பொருட்களின் விலையையும் அதிகரிக்கச் செய்து விடும்.
வெள்ளியன்று, ஆபரண தங்கத்தின் விலை திடீரென ஒரே நாளில் சவரனுக்கு 592 ரூபாய் அதிகரித்து 21 ஆயிரத்து 814 ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, தேவையால் உயரவில்லை. இதற்கு, டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு சரிவடைந்து வருவதுதான் காரணம். எடுத்துக்காட்டாக, நடப்பு 2011ம் ஆண்டின் முதல் காலாண்டில், தங்கம் வாங்குபவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது.
ரூபாயின் மதிப்பு மேலும் சரிவடையும் நிலையில், தங்கத்தின் விலையும் அதை சார்ந்து உயரக்கூடும். ஆனால், மத்திய அரசு ரூபாயின் மதிப்பை நிலை நிறுத்திட பல்வேறு நடவடிக்கைகளை @மற்கொண்டு வருகிறது.நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில், சீனாவில் தங்கத்திற்கான தேவை மிகவும் அதிகரித்துள்ளது. சென்ற காலாண்டில் மட்டும், அந்நாட்டில், தங்கப் பயன்பாடு 255 டன்னாக உயர்ந்துள்ளது. சீனர்கள் எதில் அதிக கவனம் செலுத்தினாலும், அது சர்வதேச அளவில் உன்னிப்பான கவனிப்புக்கு உள்ளாகிறது.
வரும் வாரம் எப்படி?வரும் வாரம் பங்கு வர்த்தகத்தில் அதிக ஏற்ற, இறக்கங்களுக்கு வாய்ப்பில்லை. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் செயல்பாடு பங்கு வர்த்தகத்தில் சிறிது முன்னேற்றத்தை ஏற்படுத்த முயற்சித்தாலும், உலக நிலவரங்கள் பங்குச் சந்தைகளை பாதிப்பதாகவே உள்ளது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)