பதிவு செய்த நாள்
21 மே2012
00:07
டாட்டா குழுமத்தைச் சேர்ந்த டாட்டா ஸ்டீல் நிறுவனம், சென்ற மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நான்காவது காலாண்டில், 433 கோடி ரூபாயை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, இதற்கு முந்தைய நிதி ஆண்டின் இதே காலாண்டை விட, 90 சதவீதம் (4,176 கோடி ரூபாய்) குறைவாகும்.இதே காலாண்டுகளில், இந்நிறுவனத்தின் நிகர விற்பனை, 33 ஆயிரத்து 443 கோடியிலிருந்து, 33 ஆயிரத்து 860 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.சென்ற நிதியாண்டில், இந்நிறுவனம், 5,390 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, முந்தைய ஆண்டில், 8,983 கோடி ரூபாயாக அதிகரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிறுவனம், சென்ற நிதியாண்டிற்கு, அதன் பங்குதாரர்களுக்கு, 120 சதவீத டிவிடெண்டு அறிவித்துள்ளது. இதன்படி, 10 ரூபாய் முகமதிப்பு கொண்ட, பங்கு ஒன்றிற்கு, 12 ரூபாய் டிவிடெண்டு கிடைக்கும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|