பதிவு செய்த நாள்
21 மே2012
00:09
பன்முக வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும், ஆதித்யா பிர்லா நுவோ நிறுவனம், மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில், 170 கோடி ரூபாயை ஒட்டு மொத்த நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டை விட 42 சதவீதம் (294 கோடி ரூபாய்) குறைவாகும்.
இதே காலத்தில், இந்நிறுவனத்தின் நிகர விற்பனை 15 சதவீதம் வளர்ச்சி கண்டு, 5,157 கோடியிலிருந்து, 5,922 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. மேலும், ஒட்டு மொத்த செலவினம் 15 சதவீதம் உயர்ந்து, 5,500 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்நிறுவனம், 40 லட்சம் டாலர் அளவிற்கு வருவாய் (21 ஆயிரத்து 536 கோடி ரூபாய்) ஈட்டக்கூடியது. தொலை தொடர்பு மற்றும் பேஷன் அண்டு லைப்ஸ்டைல் தொழில் பிரிவுகளின் வரிக்கு பிந்தைய லாபம் அதிகரித்துள்ளது. அதேசமயம், தகவல் தொழில்நுட்பம், நிதி சேவை போன்றவற்றின் மூலமாக கிடைக்கும் லாபம் சரிவடைந்துள்ளது.இந்நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, பியூச்சர் குழுமத்தின் பாண்டலூன் நிறுவனத்தை கையகப்படுத்துவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|