பதிவு செய்த நாள்
21 மே2012
00:13
புதுடில்லி:இந்தியாவின், பூச்சி மருந்து சந்தை மதிப்பு, வரும் 2017ம் ஆண்டு, தற்போது உள்ளதை விட, இரு மடங்கு உயர்ந்து, 500 கோடி டாலராக (25 ஆயிரம் கோடி ரூபாய்) அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.மத்திய, மாநில அரசுகள், வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தியுள்ளதாலும், விவசாயிகளிடம் பயிர் வளர்ப்பில் போதிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதாலும், பூச்சி மருந்து சந்தை சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது என, "இன்செக்டிசைஸ் இந்தியா' நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜேஷ் அகர்வால் தெரிவித்தார்.
கடந்த 11வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2007-12), பல்வேறு பயிர்களின், குறைந்தபட்ச ஆதரவு விலை, 29 சதவீதம் முதல் 107 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. எனினும், இந்திய வேளாண் துறையில், தனிநபர் பயன்படுத்தும் பூச்சி மருந்து, இதர ஆசிய நாடுகளை விட, மிக குறைவாக, 600 கிராம் என்றளவில் உள்ளது.இது, சீனாவில், 14 கிலோவாகவும், ஜப்பானில், 12 கிலோ என்றளவிலும் உயர்ந்துள்ளது.
இந்தியாவில், பூச்சி தாக்குதலால், அதிகளவில் பயிர்கள் நாசமாகின்றன. உலகிலேயே, இந்தியாவில் தான், போதிய பூச்சி மருந்து இன்மையால், இத்ததைய பாதிப்பு ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டள்ளது.இத்துறையின் ஆய்வின் படி, பூச்சி மருந்துக்கு, ஒரு ரூபாய் செலவிட்டால், 26 ரூபாய் மதிப்புள்ள நிலக்கடலை இழப்பு தவிர்க்கப்படும் என தெரியவந்துள்ளது. இதுபோன்று, ஒரு ரூபாய் மதிப்புள்ள பூச்சி மருந்து தெளிப்பதன் மூலம், 12 ரூபாய் மதிப்புள்ள கடுகு மற்றும் ஏழு ரூபாய் மதிப்புள்ள நெல் ஆகியவை பாதுகாக்கப்படுவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|