தங்கம் இறக்குமதி 1,000 டன்னாக குறையும்தங்கம் இறக்குமதி 1,000 டன்னாக குறையும் ... என்.டி.பி.சி., நிறுவனம் ரூ.21,000 கோடி முதலீட்டு திட்டம் என்.டி.பி.சி., நிறுவனம் ரூ.21,000 கோடி முதலீட்டு திட்டம் ...
பூச்சி மருந்து சந்தை மதிப்பு :ரூ.25,000 கோடியாக அதிகரிக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மே
2012
00:13

புதுடில்லி:இந்தியாவின், பூச்சி மருந்து சந்தை மதிப்பு, வரும் 2017ம் ஆண்டு, தற்போது உள்ளதை விட, இரு மடங்கு உயர்ந்து, 500 கோடி டாலராக (25 ஆயிரம் கோடி ரூபாய்) அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.மத்திய, மாநில அரசுகள், வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தியுள்ளதாலும், விவசாயிகளிடம் பயிர் வளர்ப்பில் போதிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதாலும், பூச்சி மருந்து சந்தை சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது என, "இன்செக்டிசைஸ் இந்தியா' நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜேஷ் அகர்வால் தெரிவித்தார்.
கடந்த 11வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2007-12), பல்வேறு பயிர்களின், குறைந்தபட்ச ஆதரவு விலை, 29 சதவீதம் முதல் 107 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. எனினும், இந்திய வேளாண் துறையில், தனிநபர் பயன்படுத்தும் பூச்சி மருந்து, இதர ஆசிய நாடுகளை விட, மிக குறைவாக, 600 கிராம் என்றளவில் உள்ளது.இது, சீனாவில், 14 கிலோவாகவும், ஜப்பானில், 12 கிலோ என்றளவிலும் உயர்ந்துள்ளது.
இந்தியாவில், பூச்சி தாக்குதலால், அதிகளவில் பயிர்கள் நாசமாகின்றன. உலகிலேயே, இந்தியாவில் தான், போதிய பூச்சி மருந்து இன்மையால், இத்ததைய பாதிப்பு ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டள்ளது.இத்துறையின் ஆய்வின் படி, பூச்சி மருந்துக்கு, ஒரு ரூபாய் செலவிட்டால், 26 ரூபாய் மதிப்புள்ள நிலக்கடலை இழப்பு தவிர்க்கப்படும் என தெரியவந்துள்ளது. இதுபோன்று, ஒரு ரூபாய் மதிப்புள்ள பூச்சி மருந்து தெளிப்பதன் மூலம், 12 ரூபாய் மதிப்புள்ள கடுகு மற்றும் ஏழு ரூபாய் மதிப்புள்ள நெல் ஆகியவை பாதுகாக்கப்படுவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)