பதிவு செய்த நாள்
21 மே2012
00:16
புதுடில்லி;நடப்பு 2012ம் ஆண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், தகவல் தொழில்நுட்ப துறையின் (ஐ.டி.), பங்களிப்பு, 7.5 சதவீதமாக உயரும் என, மத்திய தகவல் தொழில்நுட்ப இணை அமைச்சர் சச்சின் பைலட் தெரிவித்தார்.இந்திய ஐ.டி. நிறுவனங்கள், உள்நாட்டில், சென்ற நிதியாண்டில், 91 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிற்கு வளர்ச்சி கண்டுள்ளன. இது, இதற்கு முந்தைய ஆண்டில், இருந்த வளர்ச்சி மதிப்பை விட, 16.7 சதவீதம் (78 ஆயிரத்து 800 கோடி ரூபாய்) அதிகமாகும்.
இதே நிதியாண்டுகளில், இந்திய ஐ.டி. நிறுவனங்களின் ஒட்டுமொத்த ஏற்றுமதி, 8,800 கோடி டாலர் (4 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய்) என்றளவிலிருந்து, 10 ஆயிரம் கோடி டாலராக (5 லட்சம் கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது. கடந்த 2007-08 முதல், 2011-12ம் நிதியாண்டு வரையிலான, ஐந்து ஆண்டுகளில், உள்நாட்டில், ஐ.டி. துறை, சராசரியாக,
17 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.கடந்த 2008ம் ஆண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.), 6.4 சதவீதம் என்றளவில் இருந்த, தகவல் தொழில்நுட்ப துறையின் பங்களிப்பு, நடப்பு 2012ம் காலண்டர் ஆண்டில், 7.5 சதவீதம் என்றளவில் அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.நாட்டில், தகவல் தொழில்நுட்பத் துறை மூலம், 28 லட்சம் பேர் நேரடியாகவும், 89 லட்சம் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்றுள் ளனர் என, அமைச்சர் மேலும் கூறினார்.
மேலும் ஐ.டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|