என்.டி.பி.சி., நிறுவனம் ரூ.21,000 கோடி முதலீட்டு திட்டம் என்.டி.பி.சி., நிறுவனம் ரூ.21,000 கோடி முதலீட்டு திட்டம் ... ரூபாய் மதிப்பு வீழ்ச்சி பிரணாப் முகர்ஜி கவலை ரூபாய் மதிப்பு வீழ்ச்சி பிரணாப் முகர்ஜி கவலை ...
ஐ.டி., துறையின் பங்களிப்பு :7.5 சதவீதமாக அதிகரிக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மே
2012
00:16

புதுடில்லி;நடப்பு 2012ம் ஆண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், தகவல் தொழில்நுட்ப துறையின் (ஐ.டி.), பங்களிப்பு, 7.5 சதவீதமாக உயரும் என, மத்திய தகவல் தொழில்நுட்ப இணை அமைச்சர் சச்சின் பைலட் தெரிவித்தார்.இந்திய ஐ.டி. நிறுவனங்கள், உள்நாட்டில், சென்ற நிதியாண்டில், 91 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிற்கு வளர்ச்சி கண்டுள்ளன. இது, இதற்கு முந்தைய ஆண்டில், இருந்த வளர்ச்சி மதிப்பை விட, 16.7 சதவீதம் (78 ஆயிரத்து 800 கோடி ரூபாய்) அதிகமாகும்.
இதே நிதியாண்டுகளில், இந்திய ஐ.டி. நிறுவனங்களின் ஒட்டுமொத்த ஏற்றுமதி, 8,800 கோடி டாலர் (4 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய்) என்றளவிலிருந்து, 10 ஆயிரம் கோடி டாலராக (5 லட்சம் கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது. கடந்த 2007-08 முதல், 2011-12ம் நிதியாண்டு வரையிலான, ஐந்து ஆண்டுகளில், உள்நாட்டில், ஐ.டி. துறை, சராசரியாக,
17 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.கடந்த 2008ம் ஆண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.), 6.4 சதவீதம் என்றளவில் இருந்த, தகவல் தொழில்நுட்ப துறையின் பங்களிப்பு, நடப்பு 2012ம் காலண்டர் ஆண்டில், 7.5 சதவீதம் என்றளவில் அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.நாட்டில், தகவல் தொழில்நுட்பத் துறை மூலம், 28 லட்சம் பேர் நேரடியாகவும், 89 லட்சம் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்றுள் ளனர் என, அமைச்சர் மேலும் கூறினார்.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)