என்.டி.பி.சி., நிறுவனம் ரூ.21,000 கோடி முதலீட்டு திட்டம் என்.டி.பி.சி., நிறுவனம் ரூ.21,000 கோடி முதலீட்டு திட்டம் ... ரூபாய் மதிப்பு வீழ்ச்சி பிரணாப் முகர்ஜி கவலை ரூபாய் மதிப்பு வீழ்ச்சி பிரணாப் முகர்ஜி கவலை ...
அடிப்படை கட்டமைப்பு துறையின் சந்தை மதிப்பு ரூ.10,250 கோடியாக உயரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மே
2012
00:21

ஐதராபாத்:தகவல் தொழில் நுட்ப துறை (ஐ.டி.,) சார்ந்த அடிப்படை கட்டமைப்பு சந்தை, சென்ற ஆண்டை விட 10 சதவீதம் வளர்ச்சி கண்டு, நடப்பு 2012ம் ஆண்டில் 205 கோடி டாலராக (10 ஆயிரத்து 250 கோடி ரூபாய்) உயரும் என, கார்ட்னர் நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் சேமிப்பு சாதனங்கள்செர்வர்கள், தகவல் சேமிப்பு சாதனங்கள், ஒருங்கிணைப்பு கருவிகள் உள்ளிட்டவற்றை கொண்ட ஐ.டி.,அடிப்படை கட்டமைப்பு துறையின் சந்தை மதிப்பு, வரும் 2016 ம் ஆண்டில் 300 கோடி டாலராக (15 ஆயிரம் கோடி ரூபாய்) உயரும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.ஐ.டி.,அடிப்படை கட்டமைப்பு சந்தையின் வருவாய் வளர்ச்சியில், தகவல் மையங்களை நவீனப்படுத்துவது, புதிய தகவல் மையங்களை உருவாக்குவது ஆகியவை முக்கிய பங்களிப்பை வழங்கி வருகின்றன.
வருவாய்:இவற்றின் வாயிலான வருவாய், நடப்பாண்டில் 75.45 கோடி டாலர் (3,772 கோடி ரூபாய்) என்ற அளவை எட்டும் என்றும், இது, வரும் 2016ம் ஆண்டில் 96.72 கோடி (4,836 கோடி ரூபாய்) டாலராக உயரும் எனவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய நிறுவனங்களில், தொழில்நுட்பங்களை புகுத்துவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக, வர்த்தகத்தின் ஓர் அங்கமாக, தகவல் தொழில்நுட்பம் பின்னிப் பிணைந்துள்ளது.
தொழில்நுட்பம் என்பது, வர்த்தகத்தை உருவாக்கவும், புதிய கண்டுபிடிப்புகளுக்கும் முக்கிய ஆதாரமாக விளங்குகிறது என, கார்ட்னர் நிறுவனத்தின் ஆய்வுப் பிரிவு இயக்குனர் அமன் முங்லானி தெரிவித்துள்ளார்.ஐ.டி., அடிப்படை கட்டமைப்பு சந்தையில், கம்ப்யூட்டருக்கு வெளியே கையாளக்கூடிய தகவல் சேமிப்பு சாதனங்கள் (ஸ்டோரேஜ் டிஸ்க்) பிரிவு, வேகமாக வளர்ச்சியை பெற்று வருகிறது.
மதிப்பீடு:இப்பிரிவின் வருவாய் வளர்ச்சி, நடப்பாண்டில் 43.94 கோடி டாலராக (2,197 கோடி ரூபாய்) இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இது, வரும் 2016ம் ஆண்டு 84.20 கோடி டாலராக (4,210 கோடி ரூபாய்) வளர்ச்சி காணும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
நிறுவனங்களுக்கு அத்தியாவசியமான 'லேன்','வேன்' தகவல் ஒருங்கிணைப்பு சாதனங்கள் உள்ளிட்ட பிரிவின் சந்தை, நடப்பாண்டில் 86.10 கோடி டாலராக வளர்ச்சி காணும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
தொழில்நுட்பம்:இது, வரும் 2016ம் ஆண்டில் 120 கோடி டாலராக (6 ஆயிரம் கோடி ரூபாய்) உயரும் என தெரிகிறது. இந்தியாவில் 'கிளவுட் கம்ப்யூட்டிங்' எனப்படும் நவீன தொழில்நுட்ப பயன்பாடு ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது. இவ்வகை தொழில்நுட்ப சேவை வழங்கும் நிறுவனங் களும், அடிப்படை கட்ட மைப்பு துறையின் வளர்ச்சிக்குவித்திட்டுள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)