பதிவு செய்த நாள்
22 மே2012
00:10
புதுடில்லி:கடந்த இரண்டு ஆண்டுகளில், மதிப்பு கூட்டப்பட்ட உருக்கு பொருட்கள் விலை, 32 சதவீதம் உயர்ந்துள்ளது.மோட்டார் வாகனங்கள், மற்றும் கூரைகளில் பயன்படுத்தப்படும், சிறப்பு வகை உருக்கு தகடு (கல்வனைஸ்டு ஷீட்) விலை, மிகவும் உயர்ந்துள்ளது. சென்னையில், கடந்த 2010ம் ஆண்டு மார்ச் மாதம், ஒரு டன், கல்வனைஸ்டு தகட்டின் விலை, 45 ஆயிரத்து 720 ரூபாயாக இருந்தது. இது, சென்ற மார்ச் மாதத்தில், 60 ஆயிரத்து 150 ரூபாயாக மிகவும் அதிகரித்திருந்தது.
இதே மாதங்களில், கோல்கட்டாவில், இதன் விலை, 12 ஆயிரத்து 490 ரூபாய் உயர்ந்து, 55 ஆயிரத்து 680 ரூபாயாக அதிகரித்துள்ளது. டில்லி மற்றும் மும்பையில் இதன் விலை முறையே, 8,710 ரூபாய் மற்றும் 12 ஆயிரத்து 550 ரூபாய் உயர்ந்துள்ளது.இதேபோல், மோட்டார் வாகனங்கள், பிரிஜ், "ஏசி' சாதனங்கள், வாஷிங்மெஷின் உள்ளிட்ட நுகர்வோர் சாதனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும், உருக்கு பொருட்கள் விலையும் உயர்ந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|