பதிவு செய்த நாள்
22 மே2012
00:12
நாமக்கல்:நாமக்கல் மண்டலத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில், கடந்த ஓர் ஆண்டில் மட்டும், கூடுதலாக 73 லட்சம் முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.இங்கு கோழிப்பண்ணைகளை சார்ந்து தீவனம் தயார் செய்தல், முட்டைகளை வைப்பதற்கான அட்டைகளை தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு துணைத் தொழில்களும் நடைபெற்று வருகின்றன.இங்குள்ள பண்ணையாளர்கள், கடந்த பத்தாண்டில் இத்தொழிலை பல மடங்கு விரிவுபடுத்தியுள்ளனர்.
அதன் பலனாக முட்டை உற்பத்தி சிறப்பான அளவில் உயர்ந்துள்ளது.அந்த வகையில், கடந்த பத்தாண்டில் முட்டை உற்பத்தி நிலவரம் குறித்த பட்டியலை, தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2001-02ம் நிதியாண்டு சராசரியாக, ஒரு கோடியே 14 லட்சம் முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டன.கடந்த, 2009-10ல், 2 கோடியே 20 லட்சம் முட்டைகளும், 2010-11ல், 2 கோடியே 41 லட்சம் முட்டைகளும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
கடந்த 2011-12ம் நிதியாண்டில், 3 கோடியே 13 லட்சம் முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.இதுகுறித்து, தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு தலைவர் (நாமக்கல் மண்டலம்)செல்வராஜ் கூறியதாவது:பண்ணைகளின் விரிவாக்க நடவடிக்கைகளாலும், புதிய பண்ணைகள் உருவாகியுள்ளதாலும், முட்டை உற்பத்தி அதிகரித்துள்ளது. நாமக்கல் மண்டலத்தில் கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, 1,000 கோழிப்பண்ணைகள் உள்ளன. இவ்வாறு செல்வராஜ் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|