பதிவு செய்த நாள்
22 மே2012
00:14
சென்னை:பொதுத் துறையைச் சேர்ந்த எல்.ஐ.சி.நிறுவனம், ஆயுள் காப்பீட்டு வர்த்தகத்தில், ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், "ஜீவன் வைபவ்' என்ற, காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.இதுகுறித்து இந்நிறுவனத்தின் தென் மண்டல மேலாளர் டீ.டீ.சிங் கூறியதாவது:பங்கு சந்தை சாராத, இந்த புதிய திட்டத்திற்கான, குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை, 2 லட்சம் ரூபாய். பத்து ஆண்டுகள் முதிர்வு காலம் கொண்ட, இக்காப்பீட்டுத் திட்டத்தில், காப்பீடுதாரர்கள் ஒரே முறை பிரிமியம் கட்டினால் போதும்.
குறைந்தபட்ச பிரிமிய தொகை, 95 ஆயிரத்து 210 ரூபாய்.காப்பீடுதாரர்களுக்கு, பத்து ஆண்டுகளுக்கு பிறகு, லாயல்டி தொகையான, 25 ஆயிரம் ரூபாயுடன், 2 லட்சம் ரூபாய் முதிர்வு தொகை கிடைக்கும். எட்டு முதல் 65 வயது வரை உள்ளவர்கள் இத்திட்டத்தில் சேரலாம்.இத்திட்டம், நேற்று தொடங்கப்பட்டுள்ளது. 120 நாட்களுக்குள் இத்திட்டத்தில் முதலீடு öŒ#யலாம். பிரிமியம் செலுத்தி, ஓர் ஆண்டு நிறைவு பெற்ற உடன், இத்திட்டத்தில் கடன் பெற்று கொள்ளும் வசதியும் உண்டு. இவ்வாறு சிங் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|