பதிவு செய்த நாள்
22 மே2012
00:17
புதுடில்லி:இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர வர்த்தகம், வரும் 2014ம் ஆண்டில், 2 ஆயிரத்து 500 கோடி டாலராக (1 லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய்) அதிகரிக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக, இந்திய தொழிலக கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) தெரிவித்துள்ளது.இரு நாடுகளுக்கு இடையில், பொறியியல் சாதனங்கள், மோட்டார் வாகன உதிரி பாகங்கள், ரசாயன பொருட்கள், இரும்பு, உருக்கு உள்ளிட்ட பொருட்களின் மீது அதிகளவில் வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்ற 2010-11ம் நிதியாண்டில், இவ்விருநாடுகளுக்கு இடையில், 1,300 கோடி டாலர் (65 ஆயிரம் கோடி ரூபாய்) மதிப்பிற்கு வர்த்தகம் நடைபெற்றது. கடந்த 2011ம் ஆண்டு, இந்தியா- ஜப்பான் இடையே பொருளாதார நடவடிக்கைகளுக்கான, வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, வர்த்தகத்தின் போது, பெரும்பாலான பொருட்களுக்கு, இந்நாடுகளில் வரி சலுகை வழங்கப்படுகிறது.இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், வரும் 2014ம் ஆண்டில், 2 ஆயிரத்து 500 கோடி டாலராக (1 லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய்) அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|