இந்தியா - ஜப்பான் வர்த்தகம் ரூ.1,25,000 கோடியாக உயரும்இந்தியா - ஜப்பான் வர்த்தகம் ரூ.1,25,000 கோடியாக உயரும் ... வரும் 2012-13ம் வேளாண் பருவத்தில் உணவு தானிய உற்பத்தி இலக்கு 25 கோடி டன் வரும் 2012-13ம் வேளாண் பருவத்தில் உணவு தானிய உற்பத்தி இலக்கு 25 கோடி டன் ...
ஏப்ரலில் மின் பற்றாக்குறை 11,000 மெகாவாட்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மே
2012
00:21

புதுடில்லி:நாடு தழுவிய அளவில் சென்ற ஏப்ரல் மாதத்தில், முக்கிய நேரத்தில், மின்சாரத்திற்கான பற்றாக்குறை, 11 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரித்து காணப்பட்டது.சென்ற ஏப்ரலில், நாட்டின் ஒட்டு மொத்த மின் உற்பத்தி, 1 லட்சத்து 17 ஆயிரத்து 124 மெகாவாட்டாக இருந்தது.
தேவை:அதேசமயம், இதற்கான தேவை, 1 லட்சத்து 28 ஆயிரம் மெகாவாட் என்றளவில் மிகவும் அதிகரித்து காணப்பட்டது.எனவே, இதற்கான பற்றாக்குறை
10 ஆயிரத்து 876 மெகாவாட் என்றளவில் இருந்தது என, மத்திய மின்சார ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் மின் பற்றாக்குறையால் மிகவும் பாதிக்கப்பட்டன.நாட்டின் மின் உற்பத்தியில் அனல் மின் நிலையங்களின் பங்களிப்பு மிக அதிகமாக உள்ளது. எனவே, நிலக்கரி பற்றாக்குறையினால் இம்மின் நிலையங்களின் உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
சென்ற ஏப்ரலில், குறைந்தது 25 அனல் மின் உற்பத்தி நிலையங்கள், நிலக்கரி பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளன.சென்ற ஏப்ரலில், தென்மாநிலங்களில், முக்கிய நேரங்களில், மின்சாரத்திற்கான பற்றாக்குறை 15 சதவீதம் என்றளவில் இருந்தது. அதாவது, மின் உற்பத்தி 30 ஆயிரத்து 681 மெகாவாட்டாகவும், இதற்கான தேவை 36 ஆயிரத்து 67 மெகாவாட்டாக மிகவும் அதிகரித்து காணப்பட்டது.
தென்மாநிலங்கள் தவிர, உத்தரகாண்ட் மாநிலமும், மின் பற்றாக்குறை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இம்மாநிலத்திற்கான மின் பற்றாக்குறை, சென்ற ஏப்ரல் மாதத்தில், 15.7 சதவீதம் என்றளவில் இருந்தது.
குஜராத் மாநிலம்: டில்லி, குஜராத் மற்றும் கோவா உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில், மின் அளிப்பு ஓரளவிற்கு நன்கு இருந்தது. குறிப்பாக, டில்லியில், முக்கிய நேரங்களில், மின்சாரத்திற்கான தேவை 3,779 மெகாவாட் என்றளவில் இருந்தது. மேலும், குஜராத் மற்றும் கோவா மாநிலங்களில் இதற்கான தேவை முறையே, 0.2 சதவீதம் மற்றும் 0.4 சதவீதம் என்ற அளவில் மிக குறைவாகவே இருந்தது.அதேசமயம், வட மாநிலங்களான, ஹரியானா, இமாச்சலப்பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில், முக்கிய நேரங்களில் நிலவும் மின் பற்றாக்குறை 7 சதவீதம் என்ற அளவை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)