பதிவு செய்த நாள்
22 மே2012
00:21
புதுடில்லி:நாடு தழுவிய அளவில் சென்ற ஏப்ரல் மாதத்தில், முக்கிய நேரத்தில், மின்சாரத்திற்கான பற்றாக்குறை, 11 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரித்து காணப்பட்டது.சென்ற ஏப்ரலில், நாட்டின் ஒட்டு மொத்த மின் உற்பத்தி, 1 லட்சத்து 17 ஆயிரத்து 124 மெகாவாட்டாக இருந்தது.
தேவை:அதேசமயம், இதற்கான தேவை, 1 லட்சத்து 28 ஆயிரம் மெகாவாட் என்றளவில் மிகவும் அதிகரித்து காணப்பட்டது.எனவே, இதற்கான பற்றாக்குறை
10 ஆயிரத்து 876 மெகாவாட் என்றளவில் இருந்தது என, மத்திய மின்சார ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் மின் பற்றாக்குறையால் மிகவும் பாதிக்கப்பட்டன.நாட்டின் மின் உற்பத்தியில் அனல் மின் நிலையங்களின் பங்களிப்பு மிக அதிகமாக உள்ளது. எனவே, நிலக்கரி பற்றாக்குறையினால் இம்மின் நிலையங்களின் உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
சென்ற ஏப்ரலில், குறைந்தது 25 அனல் மின் உற்பத்தி நிலையங்கள், நிலக்கரி பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளன.சென்ற ஏப்ரலில், தென்மாநிலங்களில், முக்கிய நேரங்களில், மின்சாரத்திற்கான பற்றாக்குறை 15 சதவீதம் என்றளவில் இருந்தது. அதாவது, மின் உற்பத்தி 30 ஆயிரத்து 681 மெகாவாட்டாகவும், இதற்கான தேவை 36 ஆயிரத்து 67 மெகாவாட்டாக மிகவும் அதிகரித்து காணப்பட்டது.
தென்மாநிலங்கள் தவிர, உத்தரகாண்ட் மாநிலமும், மின் பற்றாக்குறை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இம்மாநிலத்திற்கான மின் பற்றாக்குறை, சென்ற ஏப்ரல் மாதத்தில், 15.7 சதவீதம் என்றளவில் இருந்தது.
குஜராத் மாநிலம்: டில்லி, குஜராத் மற்றும் கோவா உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில், மின் அளிப்பு ஓரளவிற்கு நன்கு இருந்தது. குறிப்பாக, டில்லியில், முக்கிய நேரங்களில், மின்சாரத்திற்கான தேவை 3,779 மெகாவாட் என்றளவில் இருந்தது. மேலும், குஜராத் மற்றும் கோவா மாநிலங்களில் இதற்கான தேவை முறையே, 0.2 சதவீதம் மற்றும் 0.4 சதவீதம் என்ற அளவில் மிக குறைவாகவே இருந்தது.அதேசமயம், வட மாநிலங்களான, ஹரியானா, இமாச்சலப்பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில், முக்கிய நேரங்களில் நிலவும் மின் பற்றாக்குறை 7 சதவீதம் என்ற அளவை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|