பதிவு செய்த நாள்
23 மே2012
00:30
மும்பை:கடந்த மூன்று வர்த்தக தினங்களாக ஓரளவிற்கு நன்கு இருந்த பங்கு வர்த்தகம், செவ்வாய்க்கிழமையன்று மிகவும் மோசமாக இருந்தது. வரலாற்றில் முதன் முறையாக டாலருக்கு எதிரான, இந்திய ரூபாயின் மதிப்பு மிகவும் வீழ்ச்சி கண்டது. இதையடுத்து, பங்குச் சந்தைகளில் வியாபாரம் சுணக்கம் கண்டது.ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளின் உச்சி மாநாட்டில், கடன் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், பல புதிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற நிலைப்பாட்டால், ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சூடுபிடித்து காணப்பட்டது. இருப்பினும், இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளில் எதிரொலிக்கவில்லை.
நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், வங்கி, உலோகம், பொதுத் துறை நிறுவனங்கள், மின்சாரம், பொறியியல் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை மிகவும் சரிவடைந்து போனது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 156.85 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 16,026.41 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 16,366.72 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 16,000.84 புள்ளிகள் வரையிலும் சென்றது.
'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், டி.சி.எஸ்., டாட்டா மோட்டார்ஸ், எச்.டீ.எப்.சி. மற்றும் பீ.எச்.இ.எல்., ஆகிய நான்கு நிறுவனப் பங்குகள் தவிர, ஏனைய 26 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்து போனது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிப்டி' 45.55 புள்ளிகள் குறைந்து, 4,860.50 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 4,956.35 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 4,849.90 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|