பதிவு செய்த நாள்
26 மே2012
01:26
புதுடில்லி:நாட்டில் உள்ள முன்பேர வர்த்தக சந்தைகளில், நடப்பு 2012-13ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் மே 15ம் தேதி வரையிலான காலத்தில், 18 லட்சத்து 49 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், மேற்கொள்ளப்பட்ட வர்த்தகத்தை விட, 7.32 சதவீதம் (19 லட்சத்து 95 ஆயிரம் கோடி ரூபாய்) குறைவு என, பார்வர்டு மார்கெட்ஸ் கமிஷன் (எப்.எம்.சி.) தெரிவித்துள்ளது.தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்ட மதிப்புமிகு உலோகங்கள் மீதான வர்த்தகம் குறைந்ததையடுத்து, ஒட்டுமொத்த அளவில், முன்பேர சந்தைகளில் வர்த்தகம் சரிவடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கணக்கீட்டு காலத்தில், தங்கம், வெள்ளி மீதான வர்த்தகம், 34 சதவீதம் சரிவடைந்து, 12 லட்சத்து 86 ஆயிரத்து 538 கோடியிலிருந்து, 8 லட்சத்து 48 ஆயிரத்து 489 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.அதேசமயம், வேளாண் விளைபொருட்கள் மீதான வர்த்தகம், 50.23 சதவீதம் வளர்ச்சிகண்டு, 1 லட்சத்து 73 ஆயிரத்து 661 கோடியிலிருந்து, 2 லட்சத்து 60 ஆயிரத்து 887 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. தாமிரம் மீதான வர்த்தகம், 41 சதவீதம் உயர்ந்து, 2 லட்சத்து 89 ஆயிரத்து 72 கோடியிலிருந்து, 4 லட்சத்து 7 ஆயிரத்து 707 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.எரிபொருள் மீதான வர்த்தகம், 35 சதவீதம் அதிகரித்து, 2 லட்சத்து 45 ஆயிரத்து 841 கோடியிலிருந்து, 3 லட்சத்து 31 ஆயிரத்து 998 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த 2011-12ம் நிதியாண்டில், முன்பேர சந்தைகளில், 181 லட்சத்து 26 கோடி ரூபாய் மதிப்பிற்கு வர்த்தகம் இருந்தது.தற்போது, உள்நாட்டில், தேசிய அளவில், ஐந்து சந்தைகளும், மண்டல அளவில், 15 முன்பேர சந்தைகளும் உள்ளன.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|