‌ரூரல் எலக்ட்ரிபிகேஷன் கார்ப்.,ரூ.30,000 கோடி திரட்ட திட்டம்‌ரூரல் எலக்ட்ரிபிகேஷன் கார்ப்.,ரூ.30,000 கோடி திரட்ட திட்டம் ... பயன்பாடு அதிகரிப்பால்...தாவர எண்ணெய் இறக்குமதி செலவினம் உயர வாய்ப்பு பயன்பாடு அதிகரிப்பால்...தாவர எண்ணெய் இறக்குமதி செலவினம் உயர வாய்ப்பு ...
மொபைல் போன் வாடிக்கையாளர்கள் 67 கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மே
2012
01:26

புதுடில்லி:சென்ற ஏப்ரல் மாதம், ஜி.எஸ்.எம். தொழில்நுட்பத்திலான, மொபைல்போன் சேவையை பெற்ற வாடிக்கையாளர் எண்ணிக்கை, 65 லட்சம் அதிகரித்துள்ளது. ஜி.எஸ்.எம்., வாடிக்கையாளர்இதன் மூலம், நாட்டில் இச்சேவையை பெற்றுள்ள வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, 67 கோடியாக உயர்ந்துள்ளது என, இந்திய மொபைல்போன் சேவை நிறுவனங்கள் சங்கம் தெரிவித்துள்ளது.உள்நாட்டில், மொபைல் சேவையில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள், சி.டி.எம்.ஏ., மற்றும் ஜி.எஸ்.எம். என இருவகை தொழில்நுட்பத்தில், மொபைல் சேவையை வழங்கி வருகின்றன. இதில், ஜி.எஸ்.எம்., வாடிக்கையாளர் எண்ணிக்கையே சிறப்பான அளவில் அதிகரித்து வருகிறது.இந்தியாவில், மொபைல் போன் சேவையில் முதலிடத்தில் உள்ள பார்தி ஏர்டெல் நிறுவனம், சென்ற ஏப்ரல் மாதத்தில், மிகவும் அதிகபட்சமாக, 20 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை இணைத்துக் கொண்டுள்ளது. இதன் மூலம், இந்நிறுவனத்தின் மொத்த மொபைல்போன் வாடிக்கையாளர் எண்ணிக்கை, 18.33 கோடியாக உயர்ந்துள்ளது.

மொபைல்போன் சேவையில், இரண்டாவது இடத்தில் உள்ள ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம், சென்ற ஏப்ரல் மாதத்தில், அதன் புதிய வாடிக்கையாளர்கள் குறித்த புள்ளி விவரத்தை வெளியிடவில்லை.வோடபோன் இந்தியா மதிப்பீட்டு மாதத்தில், மொபைல் போன் சேவையில், மூன்றாவது இடத்தில் உள்ள, வோடபோன் இந்தியா நிறுவனம், 8 லட்சத்து 20 ஆயிரம் புதிய வாடிக்கையாளர்களை இணைத்து கொண்டுள்ளது. இதன் மூலம், இந்நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 15 கோடியே 13 லட்சமாக அதிகரித்துள்ளது.

இதே மாதத்தில், மொபைல் சேவையில், நான்காவது இடம் வகிக்கும், ஐடியா செல்லுலார் நிறுவனம், 14 லட்சம் 90 ஆயிரம் வாடிக்கையாளர்களை இணைத்து கொண்டது. இதையடுத்து, இந்நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை, 11 கோடியே 42 லட்சமாக உயர்ந்துள்ளது.டெலினார் இந்தியா நிறுவனத்தின், வாடிக்கையாளர் எண்ணிக்கை, 11 லட்சத்து 20 ஆயிரம் உயர்ந்து, 4 கோடியே 36 லட்சமாக அதிகரித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)