மொபைல் போன் வாடிக்கையாளர்கள் 67 கோடிமொபைல் போன் வாடிக்கையாளர்கள் 67 கோடி ... பணிக்கு வரவிட்டால் புதியவர்களை நியமிப்போம்: ஏர் இந்திய பைலட்டுகளுக்கு அஜித் சிங் எச்சரிக்கை! பணிக்கு வரவிட்டால் புதியவர்களை நியமிப்போம்: ஏர் இந்திய பைலட்டுகளுக்கு ... ...
பயன்பாடு அதிகரிப்பால்...தாவர எண்ணெய் இறக்குமதி செலவினம் உயர வாய்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மே
2012
01:28

புதுடில்லி:நடப்பு எண்ணெய் பருவத்தில் (அக்., - செப்.,), நாட்டின் தாவர எண்ணெய் இறக்குமதிக்கான செலவினம், 50 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கும். இது, கடந்த பருவத்தில், மேற்கொள்ளப்பட்ட செலவினத்தை விட, 20 சதவீதம் அதிகமாக இருக்கும் என, இந்திய சமையல் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயல் இயக்குனர் பீ.வி.மேத்தா தெரிவித்தார்.தனிநபர் பயன்பாடு:உள்நாட்டில், தனிநபர் தாவர எண்ணெய் பயன்பாடு, 3-5 சதவீத அளவிற்கு உயர்ந்துள்ளது. எனவே, இதன் இறக்குமதி குறைய வாய்ப்பில்லை. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் கீழ், இடம்பெறும் தாவர எண்ணெய்க்கு, உள்நாட்டில், அதிக தேவை இருந்து வருகிறது.


நாட்டின் மொத்த இறக்குமதியில், பெட்ரோலிய பொருட்களுக்கு அடுத்தபடியாக, சமையல் எண்ணெய் வகைகளை உள்ளடக்கிய தாவர எண்ணெய் உள்ளது.
நடப்பு பருவத்தில், நாட்டின் தாவர எண்ணெய் இறக்குமதி, 95 லட்சம் டன்னாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, முந்தைய பருவத்தில், மேற்கொள்ளப்பட்ட இறக்குமதியை விட, 15 சதவீதம் (88 லட்சம் டன்) அதிகமாகும்.உள்நாட்டுத் தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு, எண்ணெய் வித்துகள் உற்பத்தி இல்லாததால், நம் நாடு, அதிகளவில், தாவர எண்ணெய் வகைகளை இறக்குமதி செய்து கொள்கிறது. இனி வரும் மாதங்களில், இதன் விலை, 15-20 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இறக்குமதி:சென்ற ஏப்ரல் மாதத்தில், மட்டும், இதன் இறக்குமதி, கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தை விட, இரண்டு மடங்கு அதிகரித்து, அதாவது, 4 லட்சத்து 75 ஆயிரத்து 123 டன்னிலிருந்து, 9 லட்சத்து 25 ஆயிரத்து 334 டன்னாக உயர்ந்துள்ளது.நடப்பு பருவத்தில், அக்டோபர் முதல் மார்ச் வரையிலான முதல் ஆறு மாத காலத்தில், தாவர எண்ணெய் இறக்குமதி, 31 சதவீதம் உயர்ந்து, 47 லட்சத்து 14 ஆயிரத்து 963 டன்னாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய பருவத்தின் இதே காலத்தில், 36 லட்சத்து 3 ஆயிரத்து 541 டன்னாக இருந்தது என, மேத்தா மேலும் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)