பயன்பாடு அதிகரிப்பால்...தாவர எண்ணெய் இறக்குமதி செலவினம் உயர வாய்ப்புபயன்பாடு அதிகரிப்பால்...தாவர எண்ணெய் இறக்குமதி செலவினம் உயர வாய்ப்பு ... பணிக்கு வரவிட்டால் புதியவர்களை நியமிப்போம்: ஏர் இந்திய பைலட்டுகளுக்கு அஜித் சிங் எச்சரிக்கை! பணிக்கு வரவிட்டால் புதியவர்களை நியமிப்போம்: ஏர் இந்திய பைலட்டுகளுக்கு ... ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
விலை உயர்வு எதிரொலி: பெட்ரோல் கார் விற்பனை மேலும் குறையும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மே
2012
01:30

மும்பை:பெட்ரோல் விலை உயர்வால், மாருதியின் ஆல்டோ, ஹூண்டாயின் இயான் உள்ளிட்ட பெட்ரோலில் இயங்கும் கார்களின் விற்பனை குறையும் என, இத்துறையைச் சேர்ந்த ஆய்வு நிறுவனங்கள் மதிப்பிட்டுள்ளன. இதை தடுக்க, இந்நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பெட்ரோல் விலை உயர்வு:சென்ற புதன் அன்று, எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 7.53 ரூபாய் உயர்த்தின. இதையடுத்து, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, டெல்லியில் 73.18, மும்பையில் 78.57, கோல்கட்டாவில் 77.88, சென்னையில் 77.53 ரூபாய் என்ற அளவிற்கு அதிகரித்துள்ளது.

இந்த விலை உயர்வால், பெட்ரோல் கார்களின் விற்பனை குறைந்து, டீசல் கார்களின் விற்பனை அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டாகவே டீசல் கார்களின் விற்பனை வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்து வருகிறது.
டீசல் விலை கட்டுப்பாடு, மத்திய அரசிடம் உள்ளதால், அதன் விலை உயர்த்தப்பட்டாலும் லிட்டருக்கு 5 ரூபாய்க்கு மேல் உயர்வு இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில், ஒரு லிட்டர் டீசல் விலை 43.95 ரூபாயாக உள்ளது.
இதில் 5 ரூபாய் உயர்த்தப்பட்டாலும், அதிகபட்சம் 49 ரூபாய் என்ற அளவிற்கே இருக்கும். இதையடுத்து, பெட்ரோலுக்கும், டீசலுக்கும் இடையே, லிட்டருக்கு 28 ரூபாய் வித்தியாசம் காணப்படும்.

இதனால், பெட்ரோல் கார் வாங்குவது குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாருதி சுசூகி:நாட்டில் பெட்ரோல் கார் விற்பனையில், மாருதி சுசூகியின் ஆல்டோ கார் முதலிடத்தில் உள்ளது. கடந்த 7 ஆண்டுகளாக, இந்நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் என்ற சிறப்பும் இதற்கு உண்டு. இந்த சிறப்பை, சென்ற ஏப்ரல் மாதம் ஆல்டோ இழந்தது.
அம்மாதத்தில், மாருதி சுசூகி நிறுவனத்தின் டீசலில் இயங்கும் ஸ்விப்ட் கார் விற்பனை, 19 ஆயிரத்து 484 ஆக அதிகரித்தது. அதே சமயம் ஆல்டோ கார் விற்பனை, 17 ஆயிரத்து 842 ஆக குறைந்தது.

ஆல்டோவை விட, ஸ்விப்ட் கார் விலை இருமடங்கு உயர்வாகும். இருந்தபோதிலும், பெட்ரோல் விலை உயர்வால், மக்களுக்கு, டீசல் கார் வாங்குவதில் ஆர்வம் அதிகரித்து வருகிறது. மாருதி சுசூகி நிறுவனத்தின் ரிட்ஸ் டீசல் கார் விற்பனையும் உயர்ந்து வருகிறது.
ஹூண்டாய்:இதே போன்று, ஹூண்டாய் நிறுவனம், அண்மையில் அறிமுகப்படுத்திய பெட்ரோலில் இயங்கும் இயான் கார் விற்பனையும் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதையடுத்து, இந்நிறுவனம் புதிய திட்டத்தின் கீழ், பெட்ரோல் கார்களுக்கு சலுகைகளை வழங்குவதாக அறிவித்துள்ளது. 'பெட்ரோல் பிரைஸ் லாக் அஸ்யூரன்ஸ்' என்ற இத்திட்டத்தின் மூலம் பெட்ரோலில் இயங்கும் இயான், சான்ட்ரோ, ஐ10, ஐ20 கார்களுக்கு, பெட்ரோல் செலவாக, மாதம் 3,100 ரூபாய் வரை, 7 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது.நடப்பு மே மாதம் 31ம் தேதி வரை பெட்ரோல் கார் வாங்குவோருக்கு இச்சலுகை கிடைக்கும் என, ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிறுவனம், இம்மாத துவக்கத்தில் சான்ட்ரோ மற்றும் ஐ10 கார்களுக்கு '5 ஸ்டார் அஸ்யூரன்ஸ்' திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், கார் பராமரிப்பு முதல் சாலை உதவி வரையிலான ஒட்டுமொத்த சேவை வழங்கப்படுகிறது.
இது போன்ற கவர்ச்சிகரமான சலுகைத் திட்டங்களை மாருதி சுசூகி, ஹோண்டா சீயல் உள்ளிட்ட, பெட்ரோல் கார் வகைகளை அதிக அளவில் கொண்டுள்ள நிறுவனங்களும் விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டாட்டா மோட்டார்ஸ்:டொயோடா,ஜெனரல் மோட்டார்ஸ், போர்டு,வோக்ஸ்வேகன், டாட்டா மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்களிடம் டீசல் வகை வாகனங்கள் அதிகம் உள்ளன. அதனால், பெட்ரோல் விலை உயர்வால் இந்நிறுவனங்களின் விற்பனை பெரிய அளவில் பாதிக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பெட்ரோலில் இயங்கும் நானோ கார்கள், மாதம் 8,000 என்ற அளவில் விற்பனையாகின்றன. இந்நிறுவனம், நடப்பு நிதியாண்டிற்குள் டீசலில் இயங்கும் நானோ கார்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதையடுத்து, இவ்வகை கார் விற்பனை இருமடங்கு அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நாட்டிலேயே தொடக்க நிலை கார் பிரிவில், இக்கார், மிகப் பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)