பதிவு செய்த நாள்
26 மே2012
01:31
மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம், வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமையன்று அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. லாப நோக்கம் கருதி, பங்குகள் விற்பனை செய்யப்பட்டதால், பங்கு வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தது.பெரும்பாலான ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள், கடன் பத்திர விற்பனைக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக இத்தாலிய பிரதமர் மரியோ மோந்தி அறிவித்தார்.
இதையடுத்து, ஐரோப்பிய நாடுகளில் பங்கு வர்த்தகம் சூடுபிடித்தது. எனினும், இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளில் எதிரொலிக்கவில்லை. இந்நிலையில், நடப்பாண்டில், சீன வங்கிகள் வழங்கும் கடன் இலக்கு குறையக்கூடும் என்ற மதிப்பீட்டால், ஒரு சில ஆசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சுணக்கம் கண்டது.நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், நுகர்வோர் சாதனங்கள், எண்ணெய், எரிவாயு, நுகர்பொருட்கள் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 4.48 புள்ளிகள் சரிந்து, 16,217.82 புள்ளிகளில் நிலைகொண்டது.
வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 16,273.48 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 16,118.35 புள்ளிகள் வரையிலும் சென்றது.'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 17 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 13 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி' 1 புள்ளி குறைந்து, 4,920.40 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 4,935.80 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 4,889.35 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|