பதிவு செய்த நாள்
26 மே2012
09:54
புதுடில்லி : ""ஏர் இந்தியா நிறுவன பைலட்டுகள், வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்பாவிட்டால், புதிய பைலட்டுகளை பணியமர்த்த வேண்டிய நிலை ஏற்படும்,'' என, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் அஜித் சிங் எச்சரித்துள்ளார். ஏர் இந்தியா விமான நிறுவனத்தின், "இந்தியன் பைலட் கில்ட்' சங்கத்தைச் சேர்ந்த பைலட்டுகள், பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 18 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வேலை நிறுத்தம் சட்ட விரோதமானது என, டில்லி ஐகோர்ட் அறிவித்தும், அவர்கள் பணிக்கு திரும்பவில்லை. இதனால், 101 பைலட்டுகளை ஏர் இந்தியா நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது.
திருப்பம் : இந்த விவகாரத்தில் நேற்று முக்கிய திருப்பம் ஏற்பட்டது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் பைலட் சங்கத்தின் பிரதிநிதிகள் ஐந்து பேரை, டில்லியில் உள்ள விமானத் துறை அமைச்சக அலுவலகத்தில், மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் அஜித் சிங் சந்தித்துப் பேசினார். 90 நிமிடங்கள், இரு தரப்புக்கும் இடையே பேச்சு நடந்தது. ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமை மேலாண்மை இயக்குனர் ரோகித் நந்தனும், இந்த சந்திப்பின் போது உடனிருந்தார்.
சந்திப்புக்கு பின், செய்தியாளர்களிடம் அஜித் சிங் பேசியதாவது: இந்த வேலை நிறுத்தம் சட்ட விரோதமானது என்றும், இதனால் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், பைலட் சங்க பிரதிநிதிகளிடம் மீண்டும் வலியுறுத்தினோம். வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் பைலட்டுகள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என, வலியுறுத்தினோம். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட யாரையும் பழி வாங்க மாட்டோம்.
எச்சரிக்கை : வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்பாவிட்டால், ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு சம்பள நிலுவைத் தொகையை வழங்குவதில் சிக்கல் ஏற்படும். எனவே, பைலட்டுகள் உடனடியாக பணிக்கு திரும்பாவிட்டால், புதிய பைலட்டுகளை பணியமர்த்த வேண்டிய நிலை ஏற்படும். ஏற்கனவே, ஏர் இந்தியா நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இது போன்ற சூழலில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது, நெருக்கடியை மேலும் அதிகரிக்கும். இவ்வாறு அஜித் சிங் கூறினார்.
பைலட்டுகள் ஆலோசனை : இதற்கிடையே, பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள 101 பைலட்டுகளையும் மீண்டும் பணியமர்த்துவது தொடர்பாக, இந்தியன் பைலட் கில்ட் சங்க பிரதிநிதிகள், சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியானது.
ஐகோர்ட் கண்டிப்பு : வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள இந்திய பைலட்டுகள் கில்டு சங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு, மும்பை உயர்நீதிமன்றமும் கண்டனம் தெரிவித்துள்ளது. டில்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஆட்பட @வண்டும் என கூறியுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|