பணிக்கு வரவிட்டால் புதியவர்களை நியமிப்போம்: ஏர் இந்திய பைலட்டுகளுக்கு அஜித் சிங் எச்சரிக்கை! பணிக்கு வரவிட்டால் புதியவர்களை நியமிப்போம்: ஏர் இந்திய பைலட்டுகளுக்கு ... ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு தங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு ...
பெட்ரோல் விலையை தொடர்ந்து டீசல், சமையல் எரிவாயு விலையும் உயர்கிறது?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மே
2012
11:06

புதுடில்லி : பெட்ரோல் விலையை தொடர்ந்து டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையையும் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. உலக சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்களே உயர்த்தி கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தததில் இருந்து தொடர்ந்து பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. அதிலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் லிட்டருக்கு ரூ.7.50 வரை உயர்த்தியுள்ளது. நாடு முழுவதும் இந்த விலை உயர்வுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. மேலும் நாடுகள் பல்வேறு கட்சியினர் சார்பிலும், பொதுமக்களும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அதேசமயம் பெட்ரோல் விலை உயர்வை வாபஸ் பெற முடியாது என்று மத்திய அரசு உறுதிபட தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பெட்ரோல் விலை உயர்வுக்கு நாடு முழுவதும் மத்திய அரசு எதிர்ப்பு அலைகள் கிளம்பியுள்ள நிலையில் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையையும் உயர்த்தி மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரும், பிரதமரின் பொருளாதார ஆலோசகருமான ரங்கராஜன் கூறுகையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெட்ரோல் விலை உயர்வுக்கு பின்னர் இந்திய பொருளாதாரத்தில் சிறு மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பெட்ரோலை போல டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையையும் உயர்த்தினால் பொருளாதாரத்தில், அந்நிய முதலீட்டிலும் இன்னும் முன்னேற்றம் காணலாம். இதனால் பணவீக்கத்தில் சிறு சுணக்கம் காணப்பட்டாலும், அந்நிய முதலீட்டிற்கு நல்ல வழிவகுக்கும் என்று கூறியுள்ளார். மேலும் இந்த விலை உயர்வு நடுத்தர மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் மத்திய அரசு நடவடிக்கை வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

ரங்கராஜனின் இந்த அறிவிப்பால் மத்திய அரசு, டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையையும் உயர்த்த திட்டமிட்டு இருப்பதாகவும், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)