பதிவு செய்த நாள்
26 மே2012
14:49
புதுடில்லி : இந்தியாவில் அதிகப்படியான வாடிக்கையாளர்களை கொண்ட முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் நிறுவனம் தன்னுடைய 4ஜி தொழில்நுட்பத்திற்காக குகால்காம் நிறுவனத்தின் 49 சதவீத பங்குகளை சுமார் ரூ.907 கோடிக்கு வாங்கியுள்ளது. இதில் ஏற்கனவே கோல்காம் நிறுவனத்தின் 26 சதவீத பங்குகளை ஏர்டெல் வைத்துள்ளது. இதுபோக புதிதாக கோல்காம் நிறுவனத்தின் 23 சதவீத பங்குகளையும் ஏர்டெல் வாங்கி இருக்கிறது. இதன்மூலம் இந்தியாவில் டில்லி, மும்பை, ஹரியானா உள்ளிட்ட பகுதிகளில் தன்னுடைய 4ஜி சேவையை தொடங்க இருக்கிறது ஏர்டெல். கோல்காம் நிறுவனம் ஆசியாவில் இருக்கும் மிகப்பெரிய தொலைத்தொடர்பு மற்று வயர்லஸ் சேவைகளில் பெரும் பங்காற்றி வருகிறது. எனவே இந்நிறுவனத்தின் பங்குகளை வாங்கி இருக்கிறது ஏர்டெல்.
காலத்திற்கு ஏற்றவாறு தன்னுடைய தொழில்நுட்ப சேவையை விரிவுப்படுத்தி வரும் ஏர்டெல் இப்போது 4ஜி சேவையிலும் களம் இறங்கி இருக்கிறது. இந்நிறுவனம் இந்தியாவில் பஞ்சாப், மகாராஷ்டிரா, கோல்கட்டா மற்றும் கர்நாடக ஆகிய பகுதிகளில் 4ஜி தொழில்நுட்பத்திற்கான லைசென்ஸ் உரிமம் பெற்றுள்ளது. இதில் ஏற்கனவே கோல்கட்டா மற்றும் பெங்களூர் ஆகிய இரண்டு இடங்களில் தன்னுடைய 4ஜி சேவையை ஏர்டெல் துவங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|