பதிவு செய்த நாள்
27 மே2012
00:13
மும்பை:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, சென்ற 18ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 180 கோடி டாலர் (9,000 கோடி ரூபாய்) சரிவடைந்து, 29 ஆயிரம் கோடி டாலராக (14 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய்) குறைந்துள்ளது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது, இதற்கு முந்தைய, 11ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 137 கோடி டாலர் சரிவடைந்து, 29 ஆயிரத்து 180 கோடி டாலராக (14 லட்சத்து 59 ஆயிரம் கோடி ரூபாய்) குறைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதே வாரத்தில், கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு, மாற்றமின்றி, 2,661 கோடி டாலர் (1 லட்சத்து 33 ஆயிரத்து 50 கோடி ரூபாய்) என்றளவில் இருந்தது.
அமெரிக்க டாலருக்கு எதிரான, யூரோ, ஸ்டெர்லிங், யென் உள்ளிட்ட இதர நாட்டு செலாவணிகளின் வெளிமதிப்பு மாறுபட்டதையடுத்து, கையிருப்பில் உள்ள அன்னியச் செலாவணியின் மதிப்பு குறைந்துள்ளதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|