பதிவு செய்த நாள்
27 மே2012
15:14
கோல்கட்டா : ஐ.டி.சி. நிறுவனத்தின் லாபம் 26 சதவீதம் உயர்ந்து ரூ.1,614 கோடியாக இருக்கிறது. சிகரெட், பேப்பர், விவசாய பொருட்கள், பிஸ்கட் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தயாரித்து வரும் ஐ.டி.சி., நிறுவனம் மார்ச் மாதம் முடிய 4வது காலாண்டு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதன்படி மார்ச் மாதம் முடிய அந்த நிறுவனத்தின் நிகரலாபம் ரூ.1,614 கோடியாக இருக்கும். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் அந்த நிறுவனத்தின் லாபம் ரூ.1,281கோடியாக இருந்தது. இதன்மூலம் அந்நிறுவனத்தின் லாபம் 26 சதவீதம் உயர்ந்து இருக்கிறது. சிகரெட், பேப்பர் மற்றும் விவசாய தொடர்பான தொழில்களில் அதிகளவு விற்பனை இந்நிறுவனத்தின் லாபம் அதிகரிக்க காரணமாக இருந்ததாக அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. மேலும் அந்நிறுவனத்தின் மொத்த வருவாயும் 17.6 சதவீதம் உயர்ந்து ரூ.6,861.35 கோடியாக இருக்கிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|