பதிவு செய்த நாள்
28 மே2012
00:39
சென்னை:தனியார் துறையைச் சேர்ந்த கரூர் வைஸ்யா வங்கி, சென்ற மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நான்காவது காலாண்டில், 147 கோடி ரூபாயை நிகர லாபமாக பெற்றுள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டை விட, 27.3 சதவீதம் (115 கோடி ரூபாய்) அதிகமாகும்.இதே காலாண்டுகளில், இவ்வங்கியின் செயல்பாட்டு லாபம், 46 சதவீதம் வளர்ச்சிகண்டு, 146 கோடியிலிருந்து, 213 கோடி ரூபாயாகவும், நிகர வட்டி வருவாய், 23.5 சதவீதம் உயர்ந்து, 211 கோடியிலிருந்து, 261 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.இவ்வங்கி, சென்ற முழு நிதியாண்டில், 502 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது.
இது, இதற்கு முந்தைய நிதியாண்டை விட, 20.7 சதவீதம் (416 கோடி ரூபாய்) அதிகமாகும். இதே நிதியாண்டுகளில், இவ்வங்கியின், மொத்த வருவாய், 45.9 சதவீதம் வளர்ச்சிகண்டு, 2,482 கோடியிலிருந்து, 3,621 கோடி ரூபாயாகவும், மொத்த வர்த்தகம், 31.7 சதவீதம் உயர்ந்து, 42 ஆயிரத்து 774 கோடியிலிருந்து, 56 ஆயிரத்து 316 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.இவ்வங்கி, சென்ற நிதியாண்டிற்கு, அதன் பங்குதாரர்களுக்கு, 140 சதவீத டிவிடெண்டு வழங்குவதாக அறிவித்துள்ளது. இதன்படி, 10 ரூபாய் முகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றிற்கு, 14 ரூபாய் டிவிடெண்டு கிடைக்கும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|