பதிவு செய்த நாள்
28 மே2012
00:40
கோவை:மத்திய அரசு, வரும் 2015ம் ஆண்டில், வீரிய நெல் சாகுபடி பரப்பளவை, 25 சதவீத அளவிற்கு உயர்த்த திட்டமிட்டுள்ளதாக, தமிழக வேளாண் பல்கலைகழகத்தின், பதிவாளர்
டாக்டர் பி.சுப்பய்யன் தெரிவித்தார்.சீனாவில், வீரிய விதை சாகுபடியால், 10 கோடி ஹெக்டேரில், 40 கோடி டன் உணவு தானியங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதேசமயம், இந்தியாவில், 14 கோடி ஹெக்டேரில், தானிய உற்பத்தி 25 கோடி டன் என்றளவில் தான் உள்ளது.குறிப்பாக, சீனாவின், மொத்த சாகுபடி பரப்பளவில், 50 சதவீதம் வீரிய நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில், இந்தியாவின் மொத்த 4.40 கோடி ஹெக்டேர் நெல் சாகுபடி பரப்பளவில், 6 சதவீத அளவிற்கே வீரிய நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது என, சுப்பய்யன் தெரிவித்தார்.உள்நாட்டில், விதைகளுக்கான தேவைப்பாடு, 48 லட்சம் டன் என்றளவில் உள்ளது. இதில், 37 சதவீதம் பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் வாயிலாக வழங்கப்படுகிறது. மீதமுள்ள விதைகள், விவசாயிகள் சேமித்து வைக்கும் தானியங்களிலிருந்தே பெற்று கொள்ளப்படுகிறது.தமிழகத்தில், விதைகளுக்கான தேவைப்பாடு, 2.50 லட்சம் டன் என்றளவில் உள்ளது. இதில், முகமை அமைப்புகள் வழங்கும், விதைகளின் பங்களிப்பு, 24 சதவீத அளவிற்கே உள்ளது என, சுப்பய்யன் மேலும் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|