இந்தியன் ஆயில் கார்ப்.,நிகர லாபம் ரூ.12,670  கோடிஇந்தியன் ஆயில் கார்ப்.,நிகர லாபம் ரூ.12,670 கோடி ... மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நேரடி வரி 12 சதவீதம் -பிரணாப் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நேரடி வரி 12 சதவீதம் -பிரணாப் ...
நடப்பு மே மாதத்தில் இதுவரையிலுமாக அன்னிய நிதி நிறுவனங்கள் ரூ.435 கோடி விலக்கல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மே
2012
00:23

புதுடில்லி:நடப்பு மே மாதத்தில், சென்ற வெள்ளிக்கிழமை வரையிலுமாக, அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தைகளில் மேற்கொண்டிருந்த முதலீட்டில் இருந்து, நிகர அளவில், 435 கோடி ரூபாயை விலக்கிக் கொண்டன.
இது, சென்ற ஏப்ரல் மாதத்தில், 1,109 கோடி ரூபாயாக இருந்தது.பங்கு முதலீடு:அன்னிய நிதி நிறுவனங்கள், மே 25ம் தேதி வரையிலுமாக, 36 ஆயிரத்து 228 கோடி ரூபாய் மதிப்பிற்கு, இந்திய நிறுவன பங்குகளில் முதலீடு செய்திருந்தன. அதேசமயம், இதே காலத்தில், இந்நிறுவனங்கள், 36 ஆயிரத்து 623 கோடி ரூபாய் மதிப்பிற்கான பங்குகளை விற்பனை செய்துள்ளன.இவ்வகையில், இந்நிறுவனங்கள், நிகர அளவில், 435 கோடி ரூபாயை விலக்கி கொண்டுள்ளதாக, பங்கு சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான,"செபி' வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின், ரூபாய் வெளிமதிப்பு சரிவடைந்து வரும், அதேநேரத்தில், நிதி மற்றும் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இந்நிலையில், சர்வதேச நிலவரங்கள் சாதகமாக இல்லை.
ஊக்குவிப்பு திட்டங்கள்:மத்திய அரசு, ஊக்குவிப்பு திட்டங்கள் எதுவும், அறிவிக்காததால், பங்கு வர்த்தகம் தொடர்ந்து மந்தமாக உள்ளது என, இத்துறையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்தனர்.இந்நிலையில், சென்ற வாரத்தில், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு, 56 ஆக அதிகரித்துள்ள நிலையில், பல நிறுவனப் பங்குகளின் மதிப்பு, மிகவும் குறைந்துள்ளது. இந்நிலையிலும், அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தைகளில், அதிகளவில் முதலீடு செய்வதை குறைத்து கொண்டுள்ளதாக, மும்பை பங்குச் சந்தையின் புரோக்கர் ஒருவர் தெரிவித்தார்.
ஏப்ரல் மாதத்தில், அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்கு சந்தைகளில் மேற்கொண்டிருந்த, மொத்த முதலீட்டிலிருந்து, 1,109 கோடி ரூபாயை விலக்கிக் கொண்டன.
நடப்பு 2012ம் ஆண்டில், இதுவரையிலுமாக, அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்கு சந்தைகளில், 42 ஆயிரத்து 407 கோடி ரூபாயையும், கடன் பத்திரங்களில், 17 ஆயிரத்து 207 கோடி ரூபாயும் முதலீடு செய்துள்ளன.
இந்நிலையில், நடப்பு 2012ம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில், இந்நிறுவனங்களின் முதலீடு, 43 ஆயிரத்து 951 கோடி ரூபாயாக உள்ளது.
பதிவு பெற்ற நிறுவனங்கள்:இதில், சென்ற ஜனவரி மாதத்தில், மேற்கொண்ட முதலீடு,
10 ஆயிரத்து 358 கோடி ரூபாயாகவும், பிப்ரவரியில், 25 ஆயிரத்து 212 கோடி ரூபாயையும், மார்ச் மாதத்தில், 8,381 கோடி ரூபாயையும் முதலீடு செய்துள்ளன.
மே 25ம் தேதி நிலவரப்படி, 1,754 அன்னிய நிதி நிறுவனங்கள், "செபி' அமைப்பிடம் பதிவு செய்து கொண்டுள்ளன. இதில், துணை கணக்குகளின் எண்ணிக்கை, 6,335 ஆக உள்ளது.
48 ஆயிரத்து 570 டன்னாக இருந்தது என, ரப்பர் வாரியம் மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)