பதிவு செய்த நாள்
29 மே2012
00:24
கோல்கட்டா:மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நேரடி வரி வருவாயின் பங்களிப்பு 12 சதவீத அளவிற்கு அதிகரிக்க வேண்டும் என்று, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது:பணவீக்கத்தின் தாக்கமில்லாத நேரடி வரிகள், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உரிய பங்களிப்பை கொண்டிருக்கவில்லை. எனினும்,மொத்த வரிகளில், அது குறிப்பிடத்தக்க அளவிற்கு உள்ளது. ஆனாலும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நேரடி வரியின் பங்களிப்பு விரைவில் 12 சதவீதமாக உயர வேண்டும் என்பதே எனது விருப்பம்.சென்ற நிதியாண்டில், நேரடி வரிகள் வாயிலாக 5 லட்சம் கோடி ரூபாய் திரட்டப்பட்டது. நடப்பு நிதியாண்டில், நேரடி வரி வாயிலாக, 5 லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|