பதிவு செய்த நாள்
29 மே2012
00:28
புதுடில்லி:நடப்பாண்டு பிப்ரவரி மாதத்தில், உள்நாட்டில் செயற்கை ரப்பர் பயன்பாடு, 34 ஆயிரத்து 675 டன்னாக அதிகரித்துள்ளது. இது, கடந்த 2011ம் ஆண்டு பிப்ரவரி மாத பயன்பாட்டை விட, 2 சதவீதம் (33 ஆயிரத்து 925 டன்) அதிகமாகும்.
இதே மாதங்களில், செயற்கை ரப்பர் உற்பத்தி, 9,634 டன்னிலிருந்து, 9,569 டன்னாக குறைந்துள்ளது என, ரப்பர் வாரியம் தெரிவித்துள்ளது.கணக்கீட்டு மாதங்களில், டயர் தயாரிப்பு நிறுவனங்களின் செயற்கை ரப்பர் பயன்பாடு, 24 ஆயிரத்து 692 டன்னிலிருந்து, 24 ஆயிரத்து 850 டன்னாக உயர்ந்துள்ளது.சென்ற பிப்ரவரி மாதத்தில், செயற்கை ரப்பர் இறக்குமதி, 27 ஆயிரத்து 695 டன்னாக உயர்ந்துள்ளது.
இது, கடந்த 2011ம் ஆண்டு பிப்ரவரி மாத, இறக்குமதியை விட, 16 சதவீதம் (23 ஆயிரத்து 726 டன்) அதிகம்.செயற்கை ரப்பர், மோட்டார் வாகன டயர்கள், சைக்கிள் டயர்கள் மற்றும் டியூபுகள், காலணிகள், பெல்ட்டுகள் போன்றவற்றின் தயாரிப்பில் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. கடந்த 2009-10ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் பிப்ரவரி மாதம் வரையிலான, 11 மாத காலத்தில், உள்நாட்டில் செயற்கை ரப்பர் உற்பத்தி,
1 லட்சத்து 2 ஆயிரம் டன்னாக இருந்தது. இது, முந்தைய 2010-11ம் நிதியாண்டின் இதே காலத்தில், 1 லட்சம் டன்னாக இருந்தது.
சென்ற 2011-12ம் நிதியாண்டின், இதே காலத்தில், செயற்கை ரப்பர் பயன்பாடு, 3 லட்சத்து
87 ஆயிரம் டன்னாக அதிகரித்துள்ளது. இது, அதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலத்தில், 3 லட்சத்து 75 ஆயிரம் டன்னாக இருந்தது.கணக்கீட்டு காலத்தில், மோட்டார் தயாரிப்பு நிறுவனங்களின், செயற்கை ரப்பர் பயன்பாடு, 2 லட்சத்து 72 ஆயிரம் டன்னிலிருந்து, 2 லட்சத்து 80 ஆயிரம் டன்னாக வளர்ச்சி கண்டுள்ளது. இதே காலத்தில், இதன் இறக்குமதி, 2 லட்சத்து 75 ஆயிரம் டன்னிலிருந்து, 2 லட்சத்து 97 ஆயிரம் டன்னாக உயர்ந்துள்ளது.நடப்பு 2012ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இறுதி வரையிலுமாக, செயற்கை ரப்பர் கையிருப்பு,
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|