பதிவு செய்த நாள்
29 மே2012
00:50
மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம், வாரத்தின் தொடக்க தினமான, திங்கள் கிழமையன்று நன்கு இருந்தது. ஐரோப்பா மற்றும் இதர ஆசிய பங்குச் சந்தைகளில், பங்கு வர்த்தகம் சூடுபிடித்து காணப்பட்டது. இதன் தாக்கம், இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளிலிருந்து, கிரீஸ் வெளியேறாது என்ற கருத்தால், ஐரோப்பிய நாடுகளில், பங்கு வியாபாரம் நன்கு இருந்தது. நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், நுகர்வோர் சாதனங்கள், மின்சாரம், பொறியியல் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், அதிக விலைக்கு கைமாறின. சில்லரை முதலீட்டாளர்களின், முதலீடும் அதிகரித்திருந்தது.பங்கு வர்த்தகத்தில், முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பும், நேற்றைய வர்த்தகத்தில், 28 காசுகள் உயர்ந்து, 55.19 ல் நிலைபெற்றது.மும்பை பங்கு சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 199.02 புள்ளிகள் அதிகரித்து, 16,416.84 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 16,439.97 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 16,273.49 புள்ளிகள் வரையிலும் சென்றது. சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 24 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும்,6 நிறுவன பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்கு சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி' 65.25 புள்ளிகள் உயர்ந்து, 4,985.65 புள்ளிகளுக்கு சென்றது. வர்த்தகத்தின் இடையே அதிக பட்சமாக, 4,994.95 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 4,931.30 புள்ளி கள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|