பதிவு செய்த நாள்
30 மே2012
00:53
சென்னை:சுந்தரம் பைனான்ஸ் நிறுவனம், சென்ற மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த, நிதியாண்டில், 355 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டை விட, 38 சதவீதம் (257 கோடி ரூபாய்) அதிகமாகும்.இதே நிதியாண்டுகளில், இந்நிறுவனம் வழங்கிய கடன்கள், 7,475 கோடியிலிருந்து, 9,307 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. சென்ற மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், இந்நிறுவனம், 98.21 கோடி ரூபாயை நிகர லாபமாக பெற்றுள்ளது. இந்நிறுவனம், சென்ற நிதி ஆண்டிற்கு, 80 சதவீத இறுதி டிவிடெண்டு வழங்கவுள்ளது. இதன்படி, 10 ரூபாய் முகமதிப்பு கொண்ட, பங்கு ஒன்றுக்கு, 8 ரூபாய் டிவிடெண்டு கிடைக்கும்.மேலும், இந்நிறுவனம், சென்ற நிதியாண்டிற்கு,75 சதவீத இடைக்கால டிவிடெண்டை வழங்கியுள்ளது. ஆக, சென்ற நிதியாண்டிற்கு, இந்நிறுவனம், 15.50 ரூபா# டிவிடெண்டு வழங்குகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|