சுந்தரம் பைனான்ஸ்80 சதவீத டிவிடெண்டுசுந்தரம் பைனான்ஸ்80 சதவீத டிவிடெண்டு ... டாலர் மதிப்பு உயர்வால் வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்யும் இந்தியர்கள் டாலர் மதிப்பு உயர்வால் வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்யும் இந்தியர்கள் ...
தொலை தொடர்பு துறையில் ரூ.9 லட்சம் கோடி முதலீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மே
2012
00:56

புதுடில்லி:நடப்பு 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2012-2017), இந்திய தொலை தொடர்பு துறையில், தனியார் நிறுவனங்கள் 9 லட்சம் கோடி ரூபாய் முதலீடு மேற்கொள்ளும் என, திட்டக் குழுவின் அடிப்படை கட்டமைப்பு பிரிவு மதிப்பீடு செய்துள்ளது.இது, கடந்த 11வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் மேற்கொள்ளப்பட்ட முதலீட்டை விட, இரு மடங்கு அதிகமாகும். அடுத்து 2-3 ஆண்டுகளில் நடைபெற உள்ள, 2ஜி மற்றும் 4ஜி அலைவரிசை ஏலம் மூலம், தொலை தொடர்பு துறையில் புதிய முதலீடுகள் குவியும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தொலை தொடர்பு துறையில், கடந்த ஐந்தாண்டுகளில், ஒட்டுமொத்த அளவில், பொது மற்றும் தனியார் துறைகளின் முதலீடு 5.6 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இது, அடுத்த ஐந்தாண்டுகளில், 10 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என, திட்டக் குழு மதிப்பிட்டுள்ளது.
ஆனால், திட்டக் குழுவிற்குள்ளேயே இந்த மதிப்பீட்டில் மாறுபட்ட கருத்து நிலவுகிறது. தொலை தொடர்பு துறையில், ஒட்டுமொத்த முதலீடு 6.5 லட்சம் கோடி ரூபாயாகவும், இதில், தனியாரின் பங்களிப்பு 5.2 லட்சம் கோடி ரூபாயாகவும் இருக்கும் என, 12வது ஐந்தாண்டு திட்டத்திற்கான பணிக்குழு மதிப்பிட்டுள்ளது.
இது குறித்து, மூத்த அரசு அதிகாரி ஒருவர் கூறும்போது, "அலைக்கற்றை உரிமம் மற்றும் சேவைக்கான தொகையை சேர்த்து கணக்கிட்டுள்ளதால், இந்த வேறுபாடு எழுந்துள்ளது' என்றார்.2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான சர்ச்சைகள் முற்றுப் பெறும் போது, இந்த மதிப்பீடு உண்மையானதாக இருக்கும். இல்லையென்றால், முதலீடுகளில் மாறுதல் ஏதும் இருக்காது என, இத்துறை சார்ந்தவர்கள் தெரிவித்தனர்.
பொது துறையை பொறுத்தவரை, அவற்றின் முதலீடுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 11வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், பொது துறை நிறுவனங்கள் 1 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கே தொலை தொடர்பு துறையில் முதலீடு செய்துள்ளன. இது, நடப்பு 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், 1 லட்சத்து 28 ஆயிரம் கோடி ரூபாய் என்ற அளவிற்கே இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், பொது துறையை சேர்ந்த பீ.எஸ்.என்.எல்., மற்றும் எம்.டி.என்.எல் நிறுவனங்களிடம், குறிப்பிடத்தக்க விரிவாக்கத் திட்டங்கள் ஏதும் இல்லை என, இத்துறையைச் சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)