பதிவு செய்த நாள்
30 மே2012
23:53
பொதுத் துறையைச் சேர்ந்த கோல் இந்தியா நிறுவனம், நிலக்கரி வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், சென்ற மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், 4,013 கோடி ரூபாயை நிகர லாபமாக பெற்றுள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில், 4,221 கோடி ரூபாயாக இருந்தது.இதே காலாண்டுகளில், இந்நிறுவனத்தின் நிகர விற்பனை, 15 ஆயிரத்து 4 கோடியிலிருந்து, 19 ஆயித்து 418 கோடி ரூபாயாக இருந்தது.சென்ற நிதியாண்டில், இந்நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்தி, அதற்கு முந்தைய நிதியாண்டை விட, 1 சதவீதம் உயர்ந்து, 43.58 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. இதே நிதியாண்டுகளில், இந்நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய லாபம், 24.3 சதவீதம் வளர்ச்சிகண்டு, 10 ஆயிரத்து 867 கோடியிலிருந்து, 14 ஆயிரத்து 788 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|