பதிவு செய்த நாள்
30 மே2012
23:55
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -நடப்பு 2012-13ம் நிதியாண்டு முதல், உள்நாட்டு நிறுவனங்கள், அவற்றின் துணை நிறுவனங்களுடன் மேற்கொள்ளும் பரிவர்த்தனையின் மதிப்பிற்கு ஏற்ப வரி செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால், வரும் நிதியாண்டில் நிறுவன வரி வசூல் 3 ஆயிரம் கோடி ரூபாய் உயரும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இந்திய நிறுவனங்கள், அயல்நாட்டு நிறுவனங்களுடன் மேற்கொள்ளும் பரிவர்த்தனை மதிப்பிற்கு ஏற்ப வரி செலுத்த வேண்டும். ஆனால், இதில், உள்நாட்டு நிறுவனங்களிடையிலான பரிவர்த்தனைக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.இதை பயன்படுத்தி, சிறப்பு பொருளாதார மண்டங்களில் செயல்படும் பல நிறுவனங்கள், லாபத்தில் பெரும்பகுதியை அவற்றின் துணை நிறுவனங்களுக்கு அளித்து வரிச் சலுகையை பெற்று வந்தன.இந்நிலையில், நடப்பு 2012-13ம் நிதியாண்டு பட்ஜெட்டில்,மேற்கண்ட விதிமுறையின் கீழ் உள்நாட்டு நிறுவனங்களும் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால், 50 சதவீத நிறுவனங்கள், வரி செலுத்த வேண்டியிருக்கும் என்று வருமான வரித்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|