பதிவு செய்த நாள்
30 மே2012
23:57
குன்னூர்: நடப்பு 2012ம் ஆண்டின் காலண்டர் ஆண்டின், முதல் நான்கு மாத காலத்தில், Œõதகமற்ற பருவ நிலையால், சர்வதேச கருப்பு தேயிலை உற்பத்தி, கடந்த ஆண்டின் இதே காலத்தை விட, 9 சதவீதம் அல்லது 3.23 கோடி கிலோ குறைந்து, 32.24 கோடி கிலோவாக சரிவடைந்துள்ளது.இது, முந்தைய ஆண்டின் இதே காலத்தில், 35.48 கோடி கிலோவாக உயர்ந்திருந்தது என, குளோபல் டீ புரோக்கர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.மதிப்பீட்டு காலத்தில், இந்தோனேஷியாவின் தேயிலை உற்பத்தி, 14 லட்சம் கிலோ உயர்ந்து, 2.16 கோடி கிலோவாக அதிகரித்துள்ளது. இலங்கையின் தேயிலை உற்பத்தி, 42.20 லட்சம் கிலோ சரிவடைந்து, 10.41 கோடி கிலோவாக குறைந்துள்ளது.மாலத் தீவின் தேயிலை உற்பத்தி, 2.71 கோடி கிலோவிலிருந்து, 2.65 கோடி கிலோவாக குறைந்துள்ளது. நடப்பாண்டின் மார்ச் மாதம் வரையிலுமாக, கென்யாவின் தேயிலை உற்பத்தி, சென்ற ஆண்டின் இதே காலத்தில், மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை விட, 1.27 கோடி கிலோ சரிவடைந்து, 7.25 கோடி கிலோவாக குறைந்துள்ளது.இந்தியாவில், கருப்பு தேயிலை பயிரிடப்பட்டுள்ள தென் மாநிலங்களில், இதன் உற்பத்தி, 90 லட்சம் கிலோ குறைந்து, 6.30 கோடி கிலோவாக குறைந்துள்ளது. இம்மாநிலங்களில், கடந்த ஆண்டின் இதே காலத்தில், 7.20 கோடி கிலோ கருப்பு தேயிலை உற்பத்தி செய்யப்பட்டது என, இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|