பதிவு செய்த நாள்
30 மே2012
23:58
புதுடில்லி: மத்திய அரசு, 2,973 கோடி ரூபாய் மதிப்பிலான, 25 அன்னிய நேரடி முதலீட்டு திட்டங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.மொரீஷியஸ் நாட்டைச் சேர்ந்த, ஏ.ஐ.எப்., ஐஐஐ சப் நிறுவனம், 1,000 கோடி ரூபாய் அளவிற்கு அன்னிய முதலீட்டை திரட்டிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.தொலைதொடர்புமைக்ரோகியூல் டெக்னோஸ் நிறுவனம், கம்பியில்லா தொலைதொடர்பு சேவை வழங்க, அன்னிய முதலீட்டு திட்டத்தின் வாயிலாக, 523 கோடி ரூபாய் திரட்டி கொள்வதற்கும், மருத்துவ சேவையில் ஈடுபட்டு வரும், மொரீஷியஸ் நாட்டைச் சேர்ந்த மொசார்ட் நிறுவனம், அதன் விரிவாக்க நடவடிக்கைகளுக்காக, 300 கோடி ரூபாய் அளவிற்கு அன்னிய முதலீட்டை திரட்டிக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.மும்பைஇவை தவிர, ஜென்வொர்த் பைனான்சியல் மார்கேஜ் கியாரண்டி இந்தியா நிறுவனம் (124 கோடி), மும்பையைச் சேர்ந்த பிலேதிகோ பார்மாசூட்டிகல்ஸ் (500 கோடி ரூபாய்), மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த கின்டெட்சு வேர்ல்டு எக்ஸ்பிரஸ் நிறுவனம் (268 கோடி ரூபாய்) ஆகியவற்றின் திட்டங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அதேசமயம், டில்லியைச் சேர்ந்த புடென்ஹீம் இந்தியா, சென்னையைச் சேர்ந்த ஹே ஹவுஸ் பப்ளிஷர்ஸ் மற்றும் குரோயிங் ஆப்பர்சூனிட்டி பைனான்ஸ் நிறுவனங்களின், மூன்று அன்னிய நேரடி முதலீட்டு திட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.ஒத்திவைப்புமேலும், பேப்இந்தியா ஓவர்சீஸ், பாரகான் அசெட் ரீகன்ஸ்ட்ரக்ஷன், டாரா ஏரோஸ்பேஸ் சிஸ்டம்ஸ் மற்றும் நெட்மேஜிக் சொல்யூஷன்ஸ் ஆகிய, நான்கு நிறுவனங்களின் அன்னிய நேரடி முதலீட்டுத் திட்டங்களுக்கான அனுமதி, ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|