பதிவு செய்த நாள்
02 ஜூன்2012
01:37
xமும்பை:நாட்டின் பங்கு வியாபாரம் வெள்ளிக்கிழமையன்று அதிக, ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. அன்னிய நிதி நிறுவனங்களும், சில்லரை முதலீட்டாளர்களும், அதிகளவில் பங்குகளை விற்பனை செய்ததையடுத்து, மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், மீண்டும், 16,000 புள்ளிகளுக்கும் கீழ் சரிவடைந்தது.
இந்நிலையில், சீனாவின் தயாரிப்புத் துறை வளர்ச்சி சரிவடைந்துள்ளது என்ற செய்தியால், ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சுணக்கம் கண்டது. நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், மோட்டார் வாகனம், வங்கி, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்து போனது.இருப்பினும், நுகர் பொருட்கள் மற்றும் விமானச் சேவை துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு ஓரளவிற்கு தேவை இருந்தது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 253.37 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 15,965.16 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 16,226.19 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 15,933.48 புள்ளிகள் வரையிலும் சென்றது.
"சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், கெயில், ஐ.டி.சி மற்றும் சன்பார்மா ஆகிய மூன்று நிறுவனங்கள் தவிர, ஏனைய, 27 நிறுவனப் பங்குகளின் விலையும் சரிவடைந்து போனது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' 82.65 புள்ளிகள் குறைந்து, 4,841.60 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 4,925 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 4,831.75 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|