பதிவு செய்த நாள்
02 ஜூன்2012
10:09
மதுரை: தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் 3 முறை ஏற்றம் கண்டது. மத்திய அரசு தங்கத்தின் மீது கலால் மற்றும் இறக்குமதி வரிவிதிப்பை மேற்கொண்டபோது, அதன் விலை அதிகரித்தது. இதையடுத்து, வரிவிதிப்பை குறைக்கும்படி வியாபாரிகள், அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று, வரிவிதிப்பை அரசு மறுபரிசீலனை செய்தது. அதன்பின், தங்கம் விலை கொஞ்சம், கொஞ்சமாக குறைந்தது. இந்நிலையில், நேற்று ஒரே நாளில் தங்கத்தின் விலை 3 முறை அதிகரித்தது. ஒரு கிராம் தங்கம் நேற்று காலையில் ரூ. 2738க்கு விற்பனையானது. மதியம் ரூ. 2744 ஆக அதிகரித்த தங்கம், இரவு 8 மணிக்கு ரூ. 2,775 ஆக உயர்ந்தது. நேற்று முதன்முறையாக இரவில் தங்கம் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
தமிழ்நாடு நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் பாலசுப்ரமணியம் கூறுகையில், ""சர்வதேச அளவில் பொருளாதார வீழ்ச்சி, அமெரிக்க டாலரின் இந்திய மதிப்பு சரிந்ததைத் தொடர்ந்து தங்கத்தின் விலை அதிகரித்து விட்டது. இதனால், தங்கம் விற்பனை பாதிக்குமா என்பது இன்று (ஜூன் 2) தெரியும். மக்கள் தங்கம் மீது ஆர்வம் காட்டுவதால் பாதிக்காது என்றே தெரிகிறது,'' என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|