பதிவு செய்த நாள்
02 ஜூன்2012
16:36
ஸ்கார்ப்பியோ மூலம் பெற்ற நன்மதிப்பை தனது புதிய எக்ஸ்யூவி மூலம் ஏகத்துக்கும் உயர்த்திக்கொண்டுவிட்டது மஹிந்திரா. எக்ஸ்யூவி கொடுத்த உற்சாகம் கார் மார்க்கெட்டில் தனது பங்களிப்பை அதிகரித்துக் கொள்ளவும் மஹிந்திரா முடிவு செய்துள்ளது. இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு இறுதிக்குள் 6 புதிய கார்களை அறிமுகம் செய்ய இருப்பதாக மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது. வரும் செப்டம்பரில் வெரிட்டோ பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்ட புதிய ஹேட்ச்பேக் காரையும், ரேவா என்எக்ஸ்ஆர் எலக்ட்ரிக் காரையும் வரும் தீபாவளிக்கு விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக மஹிந்திரா முன்னரே அறிவித்திருந்தது. மினி ஸைலோவும் தீபாவளியையொட்டி பண்டிகை காலத்தில் விற்பனைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், மீதமுள்ள 3 புதிய மாடல்கள் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. எக்ஸ்யூவியின் வடிவமைப்பு தற்போது மார்க்கெட்டில் பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், மஹி்ந்திராவிடம் இருந்து அடுத்து வரும் புதிய மாடல்கள் குறித்த மஹிந்திராவின் அறிவிப்பு வாடிக்கையாளர் மத்தியி்ல் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|