பதிவு செய்த நாள்
03 ஜூன்2012
00:46
மும்பை:மகேந்திரா பவரால், கடைகள் மற்றும் வீடுகளுக்கு தேவையான உயர் திறன் கொண்ட, தடையில்லா மின்சாரம் அளிக்கக் கூடிய இன்வர்ட்டர்கள் மற்றும் யு.பி.எஸ்., சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது.இது குறித்து இந்நிறுவனத்தின் வர்த்தக பிரிவு தலைவர் பி.பழனியப்பன் கூறியதாவது:அலுவலகங்கள், வீடுகள், மருத்துவமனைகள், பெட்ரோல் நிலையங்கள், சில்லரை அங்காடிகள், உணவு விடுதிகள் ஆகியவற்றிற்கு தேவையான, 2.5 கே.வி.ஏ முதல், 5 கே.வி.ஏ. வரையிலான உயர் திறன் கொண்ட, இன்வர்ட்டர்கள் மற்றும் யு.பி.எஸ்.கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் குறைந்த செலவில், அதிக நேரம் உழைக்கும் வகையில் மேற்கண்ட தயாரிப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.மேலும், மைக்ரோ கன்ட்ரோலர் அடிப்படையிலான வடிவமைப்பு, குறைந்த மின்கல எரிசக்தி, இரைச்சலின்றி இயங்கும் வசதி, ஓவர்லோடின் போது ஒலியெழுப்பும் அலாரம் ஆகியவை இதன் சிறப்பம்சங்களாகும். 'ஈகோ ப்ளஸ்', 'ஈகோ', 'ஹை ஸ்பீட்'மற்றும் 'இண்டெலி' என, 4 வகைகளில் இந்த யு.பி.எஸ். சாதனங்கள் சந்தையில் கிடைக்கும். இவ்வாறு பழனியப்பன் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|