பதிவு செய்த நாள்
03 ஜூன்2012
01:00
மும்பை:நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு, சென்ற மே 25ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 174.20 கோடி டாலர் (8,710 கோடி ரூபாய்) சரிவடைந்து, 28 ஆயிரத்து 826 கோடி டாலராக (14 லட்சத்து 41 ஆயிரத்து 300 கோடி ரூபாய்) குறைந்துள்ளது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது, சென்ற 18ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 180 கோடி டாலர் (9,000 கோடி ரூபாய்) சரிவடைந்து, 29 ஆயிரம் கோடி டாலராக (14 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய்) குறைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதே வாரங்களில், அன்னிய செலாவணிகளின் சொத்து மதிப்பு, 171 கோடி டாலர் (8,550 கோடி ரூபாய்) குறைந்துள்ளது. சர்வதேச நிதியத்தில், நம் நாடு வைத்துள்ள செலாவணிகளின் மதிப்பு, 285 கோடி டாலராக (11 ஆயிரத்து 400 கோடி ரூபாய்) குறைந்துள்ளது.அமெரிக்க டாலருக்கு எதிரான, யூரோ, ஸ்டெர்லிங், யென் உள்ளிட்ட இதர நாட்டு செலாவணிகளின் வெளிமதிப்பு மாறுபட்டதையடுத்து, கையிருப்பில் உள்ள அன்னியச் செலாவணியின் மதிப்பு குறைந்துள்ளதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|