நாட்டின் காபி ஏற்றுமதி 34,415 டன்னாக குறைந்ததுநாட்டின் காபி ஏற்றுமதி 34,415 டன்னாக குறைந்தது ... வர்த்தக கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு வர்த்தக கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு ...
நடப்பு 2012-13ம் நிதி ஆண்டில் உணவு பொருட்களுக்கான மானிய சுமை ரூ.1 லட்சம் கோடியாக உயரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2012
01:09

புதுடில்லி:நடப்பு 2012-13ம் நிதியாண்டில், மத்திய அரசின், உணவுப் பொருட்களுக்கான, மானியச் சுமை, மதிப்பிட்டை விட, 1 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது, இதுவரை இல்லாத மிகவும் அதிகபட்ச அளவாகும் என, தெரியவந்துள்ளது.கொள்முதல்மத்திய அரசு, விவசாயிகளின் நலன் கருதி, வேளாண் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், உணவு தானியங்களை கொள்முதல் செய்வதற்கான, குறைந்தபட்ச ஆதரவு விலையைத் தொடர்ந்து உயர்த்தி வருகிறது. அதேசமயம், அதிக விலைக்கு கொள்முதல் செய்யப்படும் முக்கிய உணவு தானியங்களை, மத்திய அரசு, பொது வினியோகத் திட்டத்தின் கீழ், குறைந்த விலைக்கு வழங்குகிறது. இவ்விரு விலைக்கும் உள்ள இடைவெளி அதிகரிப்பால், அரசின் உணவுப் பொருட்களுக்கான மானியச் சுமை உயர்ந்து வருகிறது.
இதுகுறித்து மத்திய உணவு அமைச்சர் தாமஸ் கூறியதாவது:நடப்பு 2012-13ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில், உணவுப் பொருட்கள் மானியத்திற்காக, 74 ஆயிரத்து 551 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்ற நிதியாண்டிற்கு, இதற்கான மானிய ஒதுக்கீடு, 72 ஆயிரத்து 370 கோடி ரூபாயாக இருந்தது.
@காதுமை:இந்நிலையில், கோதுமை மற்றும் நெல் கொள்முதல், மிகவும் அதிகரித்துள்ளது. இதற்கான செலவினத்துடன், இவற்றை இருப்பு வைப்பதற்கான செலவினமும் உயர்ந்துள்ளதால், மத்திய அரசின் உணவு மானியச் சுமை, பன்மடங்கு உயர்ந்துள்ளது.நடப்பு ரபி சந்தைப்படுத்தும் பருவத்தில், மத்திய அரசு, 3.18 கோடி டன் கோதுமையை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயித்திருந்தது.
ஆனால், இதுவரையிலுமாகவே, 3.30 கோடி டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நடப்பு சந்தைப்படுத்தும் பருவத்திற்குள், இது, 3.50 கோடி டன்னாக அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பு பருவத்தில், நாட்டின் கோதுமை உற்பத்தி, இதுவரை இல்லாத அளவிற்கு, 9 கோடி டன்னாக அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த வேளாண் பருவத்தில், மத்திய அரசின் முகமை அமைப்பான, இந்திய உணவுக் கழகம், விவசாயிகளிடமிருந்து, கொள்முதல் செய்த கோதுமையின் அளவு, 2.80 கோடி டன் என்றளவில் தான் இருந்தது. இவ்வாறு அமைச்சர் தாமஸ் கூறினார்.
ஆதரவு விலை:மத்திய அரசு, விவசாயிகளிடமிருந்து, உணவு தானியங்களை, அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையில், கொள்முதல் செய்கிறது. அதேசமயம், முக்கிய உணவு தானியங்களை மத்திய அரசு, மாநில பொது வினியோகத் திட்டத்தின் கீழ் குறைந்த விலையில், விற்பனை செய்கிறது. இதனால், அரசுக்கு, இழப்பு ஏற்படுவதுடன், மானியச் சுமையும் அதிகரிக்கிறது.தற்போது, மத்திய அரசு, வறுமைக் கோட்டிற்கு கீழ், 6 கோடியே 52 லட்சம் குடும்பங்களுக்கு, மானிய விலையில், அரிசி மற்றும் கோதுமையை வழங்கி வருகிறது.
மேலும், சராசரி வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும், 8 கோடி குடும்பங்களுக்கு மிக குறைந்த விலையில், இவற்றை வழங்குகிறது.தானிய கையிருப்பு:இந்திய உணவுக் கழகம் மற்றும் மாநில முகமை அமைப்புகள், மிக அதிகளவில், தானியங்களைக் கொள்முதல் செய்துள்ளதால், நடப்பாண்டு மே மாத துவக்கத்தில், தானிய கையிருப்பு, இதுவரை இல்லாத அளவாக, 7.10 கோடி டன்னாக மிகவும் அதிகரித்துள்ளது. இந்தக் கையிருப்பு, நேற்றைய நிலவரப்படி, 7.40 கோடி டன்னாக அதிகரித்திருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, உணவு தானியங்களை கையிருப்பில், வைப்பதற்கு, இடம் இல்லாத சூழ்நிலை உருவாகி உள்ளது என, அரசு துறையைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர் கூறினார்.மத்திய அரசின், கையிருப்பில் உள்ள தானியங்களின் அளவு அதிகரித்துள்ளது என்பது, இதுவரை காணாத அளவாகும். இருப்பினும், விவசாயிகளின் நலன் கருதி, மத்திய அரசு, உணவு தானியங்களை தொடர்ந்து கொள்முதல் செய்து வருகிறது என, அமைச்சர் தாமஸ் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)