நடப்பு 2012-13ம் நிதி ஆண்டில் உணவு பொருட்களுக்கான மானிய சுமை ரூ.1 லட்சம் கோடியாக உயரும்நடப்பு 2012-13ம் நிதி ஆண்டில் உணவு பொருட்களுக்கான மானிய சுமை ரூ.1 லட்சம் ... ... வர்த்தக கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு வர்த்தக கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்கு வர்த்தகம்: சாண் ஏறினால் இரண்டு முழம் சறுக்குகிறது-சேதுராமன் சாத்தப்பன் -
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2012
01:43

நாட்டின் பங்கு வர்த்தகம், நடப்பு வாரத்தில் மிகவும் மோசமாகவே இருந்தது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி எப்படி இருக்குமோ என்ற அச்சப்பாடு, டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு தொடர்ந்து சரிவடைந்து வருவது, தொழிற்துறை உற்பத்தியில் தேக்க நிலை, சாதகமற்ற உலக மற்றும் உள்நாட்டு நிலவரங்கள் போன்றவற்றால், ஒட்டு மொத்த அளவில் பங்கு வியாபாரம் மிகவும் மந்தமாக இருந்தது.வெள்ளியன்று மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'சென்செக்ஸ்' 253 புள்ளிகள் சரிவடைந்து, மீண்டும் 16,000 புள்ளிகளுக்கும் கீழ் குறைந்து, 15,965 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிப்டி' 82 புள்ளிகள் குறைந்து, 4,842 புள்ளிகளிலும் நிலைகொண்டன. ஒட்டு மொத்த அளவில், நடப்பு வாரத்தில் 'சென்செக்ஸ்' 452 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது. வாகன விற்பனை:கடந்த பல காலாண்டுகளாக, பெட்ரோல் விலை உயர்வைப் பற்றி கவலைப்படாமல், கார்கள் விற்பனை அதிகரித்து (ஒரு சில மாதங்கள் தவிர) வந்தது. பல கார் தயாரிப்பு நிறுவனங்கள், பல புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்து வந்தன. இவற்றை வாங்குவதற்கும் பலர் ஆர்வம் காட்டி வந்தனர்.கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, சென்ற மே மாதத்தில்தான், கார்கள் விற்பனை குறைந்துள்ளது. பெட்ரோல் மற்றும் கார்கள் விலை உயர்வுதான் இந்தச் சரிவு நிலைக்கு காரணமாகும். இந்நிலையில், சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை, 100 டாலருக்கும் கீழ் குறைந்துள்ளது. இது மட்டுமே, ஆறுதல் அளிப்பதாக உள்ளது. சென்ற ஏப்ரல் மாதத்தில், நாட்டின் ஏற்றுமதி, கடந்த ஆண்டின் இதே மாதத்தை விட, 3.2 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. அதாவது, கடந்த ஆண்டு ஏப்ரலில், 2,369 கோடி டாலராக இருந்த நாட்டின் ஏற்றுமதி, நடப்பாண்டின் ஏப்ரலில், 2,445 கோடி டாலராக வளர்ச்சி கண்டுள்ளது. அதேசமயம், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிவால், ரூபாய் மதிப்பின் அடிப்படையில், ஏற்றுமதி 20 சதவீதம் உயர்ந்துள்ளது. பொருளாதார வளர்ச்சி:நாட்டின் பொருளாதார வளர்ச்சி, கடந்த 2011-12ம் ஆண்டில், கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, 6.5 சதவீதமாக மிகவும் குறைந்துள்ளது. இது, சென்ற நிதியாண்டின் நான்காவது காலாண்டில், 5.3 சதவீதமாக உள்ளது. ஒரு காலத்தில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 9 சதவீதம் என்றளவில் இருந்தது பற்றிப் பேசி வந்தோம். அவையெல்லாம், பழங்கதையாகி, தற்போது, 6.5 சதவீதத்திற்கு வந்துள்ளது. ஆறுதல் அளிக்கும் செய்தி என்னவென்றால், நம்நாடு மட்டுமின்றி, அனைத்து நாடுகளின் பொருளாதார வளர்ச்சியும், இதே போன்றுதான் உள்ளது என்பதுதான். ரூபாயின் மதிப்பும், சந்தையும்:கடந்த பல வாரங்களாக, டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. இந்நிலையில், பங்கு வர்த்தகத்தில் ஏற்பட்ட சுணக்க நிலையால், பல நிறுவனப் பங்குகளின் விலை மிகவும் குறைந்துள்ளது. இதனடிப்படையில், பல அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு மேற்கொள்ளலாம் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால், குறைந்து வரும் பொருளாதார வளர்ச்சி, இதற்கு தடை கல்லாக உள்ளது. வாங்கக்கூடிய பங்குகள்:பங்கு வர்த்தகம் பின்னடைவைக் கண்டுள்ள தற்போதைய நிலையிலும், பாலகிருஷ்ணா இண்டஸ்ட்ரீஸ், பவர்கிரிட் கார்ப்பரேஷன், இன்கா லேப்ஸ், சன் பார்மா ஆகிய நிறுவனங்களின் செயல்பாடு நன்கு உள்ளது. நீண்ட கால அடிப்படையில், இதன் பங்குகளில் முதலீடு செய்யலாம்.தென்மேற்கு பருவ மழை தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. நடப்பு மாதத்தின் முதல் வாரத்தில், கேரளாவில், பருவ மழை தொடங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. பருவ மழை, தொடங்கும் நிலையில், அது நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணை புரியும். சவால்கள்:பல பொருட்களின் விலை உயர்ந்து வருவது, ரூபாய் மதிப்பின் சரிவு நிலை, பெட்ரோல் விலை உயர்வு, அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு குறைந்து வருவது, மின் பற்றாக்குறை, பொருளாதார வளர்ச்சியில் பின்னடைவு போன்ற பல சவால்கள் நாட்டையும், பங்குச் சந்தையையும், அச்சுறுத்துவதாக உள்ளன.அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார நிலையே ஆட்டம் கண்டுள்ளது. முன்பு இது போன்ற நிலை ஏற்பட்டபோது, இந்தியா அதை மிகவும் திறம்பட சமாளித்தது. எனவே, தற்போதும், மேற்கண்ட சவால்களையெல்லாம் இந்தியா எதிர்கொண்டு வெற்றி காணும் என நம்பலாம். வரும் வாரம் எப்படி?உலக மற்றும் உள்நாட்டு நிலவரங்கள் சந்தையை புரட்டிப் போட்டு உள்ளது. இவை, பங்குச் சந்தையை மேலும் சிறிது வலுவிழக்கச் செய்யலாம். உலகின் பல்வேறு நாடுகள் மிகவும் இடர்பாட்டிற்கு உள்ளாகியுள்ளன. மத்திய அரசு, எடுக்கப்போகும் நடவடிக்கைகளும், ரூபாயின் வெளிமதிப்பு சரிவு நிலையை தடுத்து நிறுத்துவதற்கான திட்டங்களாலும்தான் பங்குச் சந்தையின் வீழ்ச்சி நிலையை தடுத்து நிறுத்த முடியும். வரும் வாரம், எப்படி இருக்கும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)