பதிவு செய்த நாள்
03 ஜூன்2012
15:47
பொங்கலூர்:மஞ்சள் விலை கடும் வீழ்ச்சியடைந்ததால், நஷ்டமடைந்த விவசாயிகள்; இந்த ஆண்டு மஞ்சள் சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டாமல் உள்ளனர். பொங்கலூர் வட்டார பகுதியில், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஓராண்டுப் பயிரான மஞ்சள் வைகாசி பட்டத்தில் சாகுபடி செய்து, தை மாதத்தில் அறுவடை செய்கின்றனர். தற்போது, மஞ்சள் சாகுபடி சீசன் துவங்கியுள்ளது. ஆனால், மஞ்சள் சாகுபடியில் விவ சாயிகள் ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.கடந்த 2010 ல் ஒரு குவிண்டால் 18,000 ரூபாய்க்கு விற்பனையானது. இது கடந்தாண்டு 7,000 ரூபாயாகவும், இந்த ஆண்டு 3,500 ரூபாயாகவும் விலை சரிந்துள்ளது. கடந்த சீசனில் மஞ்சள் பயிரில், இலைப்பேன் தாக்குதல் ஏற்பட்டதால், மகசூல் கடுமையாக பாதிக்கப்பட்டது. மகசூல் பாதிப்பு மற்றும் விலை வீழ்ச்சியால், விவசாயிகள் மஞ்சளுக்கு போட்ட முதலீட்டைக்கூட எடுக்க முடியாமல் கடும் நஷ்டத்தை சந்தித்தனர்.எனவே, இந்த ஆண்டும் விலை உயர வாய்ப்பில்லை என்ற அச்சம் காரணமாக, மஞ்சள் சாகுபடி செய்வதை பெரும்பாலான விவசாயிகள் தவிர்த்து வருகின்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|