மஞ்சள் சாகுபடி பரப்பு குறைந்ததுமஞ்சள் சாகுபடி பரப்பு குறைந்தது ... நடப்பு 2012-13ம் நிதியாண்டில்...நாட்டின் உள்நாட்டு உற்பத்தி ரூ.101 லட்சம் கோடியாக உயரும்- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து - நடப்பு 2012-13ம் நிதியாண்டில்...நாட்டின் உள்நாட்டு உற்பத்தி ரூ.101 லட்சம் ... ...
சென்னையில் ரூ.79 கோடியில் காற்றாலை மின்சார நிலையம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2012
16:19

சென்னை துறைமுகத்தில் அதிகரித்து வரும் மின்சார செலவினங்களை குறைப்பதற்காக, 79 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காற்றாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை துறைமுகம் குறித்து, துறைமுக தலைவர் அட்டுல்யா மிஸ்ரா, சமீபத்தில் அறிவிக்கை வெளியிட்டிருந்தார். சென்னை ஐகோர்ட், நிலக்கரி மற்றும் இரும்புத்தாது சரக்குகளை கையாள தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும், சென்னை துறைமுகம் நிதி பற்றாக்குறை ஏற்படாமல் இயங்கி வருகிறது. மேலும், பெட்ரோலிய பொருட்கள் வாங்கல் மற்றும் பொது சரக்குகளை கையாள்வதன் மூலம் தனது நிலையை தக்க வைத்துள்ளது.

தமிழக அளவில், அதிக சரக்குகளை கையாளும், சென்னை துறைமுகத்துக்கு மின்சார பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. துறைமுக நிர்வாகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள செலவினங்களை காட்டிலும், மின்செலவு கூடுதலாக ஏற்படுகிறது. எப்படியிருந்தாலும், மின்சார பயன்பாட்டை தவிர்க்க முடியாது என்பதால், மாற்று மின் உற்பத்தி திட்டம் மட்டுமே சரியான தீர்வாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.சென்னை துறைமுகம் 36 கோடி ரூபாயை உபரியாக கொண்டு, மொத்த வருவாயாக 62 கோடி ரூபாயை ஈட்டியுள்ளது. இந்நிதியாண்டில், பல்வேறு செலவினங்கள் கணக்கீட்டுக்கு பிறகு, ஆறு கோடி ரூபாயை நிகர உபரி வருவாயாக பெற முடியும். கடந்த ஆண்டை காட்டிலும், நிகர உபரி குறைவுக்கு, ஒட்டுமொத்த ஏற்றுமதி அளவு குறைந்ததும் காரணம் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஸ்ரீபெரும்புதூர் அருகே ராஜிவ்காந்தி ஒருங்கிணைந்த உலர் துறைமுகம் மற்றும் பன்மாதிரி சரக்கு போக்குவரத்து மையம் அமைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.மேலும், துறைமுகத்தில் அதிகரித்து வரும் மின்சார செலவினத்தை குறைக்கும் வகையில், 79 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தென்தமிழகத்தில் காற்றாலை மின்சார நிலையம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக துறைமுக தலைவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)