சென்னையில் ரூ.79 கோடியில் காற்றாலை மின்சார நிலையம்சென்னையில் ரூ.79 கோடியில் காற்றாலை மின்சார நிலையம் ... பருத்தி சாகுபடி பரப்பு 10 சதவீதம் குறையும் பருத்தி சாகுபடி பரப்பு 10 சதவீதம் குறையும் ...
நடப்பு 2012-13ம் நிதியாண்டில்...நாட்டின் உள்நாட்டு உற்பத்தி ரூ.101 லட்சம் கோடியாக உயரும்- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2012
00:40

நடப்பு 2012-13ம் நிதியாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டீ.பி) மதிப்பு, 101 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என, மத்திய அரசு மதிப்பிட்டுள்ளது. அதேசமயம், டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு, 50.79க்கும் குறைவாக இருக்கும் நிலையில், இது, சாத்தியமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கணக்கீடு:மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டீ.பி.) அல்லது பொருளாதார வளர்ச்சி என்பது, ஒரு நாட்டின் அனைத்து வகையான பொருட்களின் உற்பத்தி மதிப்பு, சேவை துறைகள் வாயிலாக ஈட்டப்படும் வருவாய், ஏற்றுமதி இவை அனைத்தையும் கணக்கிட்டு, அதிலிருந்து, இறக்குமதி மதிப்பை கழித்து கிடைக்கும் தொகையை கொண்டு கணக்கிடப்படுகிறது.கடந்த 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 88 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது, அதற்கு முந்தைய ஆண்டை விட, 14.7 சதவீதம் அதிகமாகும். இதே வளர்ச்சி, தொடரும் நிலையில், மத்திய அரசின் இலக்கு சுலபமாக எட்டப்பாடலாம்.
கடந்த 2011-12ம் நிதியாண்டில், டாலருக்கு எதிரான ரூபாயின் சராசரி மதிப்பு, 47.95 ஆக இருந்தது. இதனடிப்படையில், அவ்வாண்டு, டாலர் மதிப்பில், இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு அல்லது பொருளாதார நிலை (மறைமுக வரி வசூல் உட்பட), 1 லட்சத்து 84 ஆயிரம் கோடி டாலராக இருந்தது.
நடப்பு நிதியாண்டில், உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 14.7 சதவீதம் என்று இருக்கும் நிலையில், டாலர் மதிப்பில், 2 லட்சத்து 11 ஆயிரம் கோடி டாலராக அதிகரிக்கும். நடப்பு நிதியாண்டில் இது வரையில், டாலருக்கு எதிரான ரூபாயின் சராசரி மதிப்பு, 53.24 ஆக உள்ளது. இதனால், நாட்டின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு, 1 லட்சத்து 90 ஆயிரம் கோடி டாலர் என்ற அளவில் இருக்கும். அதேசமயம், ரூபாயின் மதிப்பு மேலும் சரிவடையும் நிலையில், உள்நாட்டு உற்பத்தி மதிப்பின் அளவும் குறையக் கூடும்.
ரூபாய் மதிப்பு:கடந்த 2010-11ம் நிதியாண்டில், டாலருக்கு எதிரான ரூபாயின் சராசரி மதிப்பு, 45.57 ஆக இருந்தது. அவ்வாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு, 1 லட்சத்து 68 ஆயிரம் கோடி டாலராக இருந்தது. இதேபோன்று, கடந்த 2009-10ம் நிதியாண்டில், ரூபாயின் சராசரி மதிப்பு, 47.42 ஆக இருந்தது. அவ்வாண்டில், நாட்டின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு (மறைமுக வரி வசூல் நீங்கலாக), 1 லட்சத்து 36 ஆயிரம் கோடி டாலராக இருந்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)