பருத்தி சாகுபடி பரப்பு 10 சதவீதம் குறையும்பருத்தி சாகுபடி பரப்பு 10 சதவீதம் குறையும் ... மா சாகுபடிக்கு மானியம்: புதிய தலைமுறை விவசாயிகளுக்கு முன்னுரிமை மா சாகுபடிக்கு மானியம்: புதிய தலைமுறை விவசாயிகளுக்கு முன்னுரிமை ...
தேவை குறைந்ததால் மிளகாய் வற்றல் விலை சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2012
00:55

கொச்சி:உள்நாட்டில், மிளகாய் வற்றலுக்கான தேவை குறைந்துள்ளது. இதனால், இதன் விலை Œரிவடைந்துள்ளதாக, வர்த்தகர்கள் தெரிவித்தனர்.பாகிஸ்தான்:இருப்பினும், நடப்பாண்டில், பாகிஸ்தானில், மிளகாய் உற்பத்தி குறைந்துள்ளதால், இதன் விலை உயர வாய்ப்புள்ளது என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அறுவடை மூலம் சந்தைக்கு, புதிய மிளகாய் வற்றல் வரத்து எந்த அளவிற்கு வருகிறது என்பதை பொறுத்து, இதன் விலை இருக்கும். தற்@பாது உள்நாட்டில், ஒரு குவிண்டால் மிளகா# வற்றல் விலை 5,100 முதல் 5,600 ரூபா# வரை உள்ளது.
பாகிஸ்தான் தவிர்த்த, இதர நாடுகளில், மிளகாய் வற்றலுக்கான தேவை குறைந்துள்ளது. இதனால், ஒட்டுமொத்த அளவில், இதன் ஏற்றுமதி, சற்று குறைந்துள்ளது. இந்நிலையில், சீனாவில், இதன் உற்பத்தி, அந்நாட்டின் தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கே உள்ளது. இதனால், அந்நாட்டின் மிளகாய் வற்றல் ஏற்றுமதி எதிர்பார்த்த அளவிற்கு இருக்காது என, கொச்சியை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் தெரிவித்தார்.
பொதுவாக, ஏற்றுமதி அதிகரிக்கும் நிலையில், இதன் விலை, உள்நாட்டு சந்தையில் உயரும். ஆனால், நடப்பாண்டில், சர்வதே சந்தையில், மிளகாய் வற்றலுக்கான தேவை குறைந்துள்ளது. இருப்பினும், முந்தைய இரண்டு ஆண்டுகளில், சீனாவில், இதன் உற்பத்தி குறைந்து போனதால், நாட்டின் மிளகாய் வற்றல் ஏற்றுமதி நன்கு இருந்தது.
உற்பத்தி:நடப்பு 2011-12ம் பருவத்தில், உள்நாட்டில், மிளகாய் வற்றல் உற்பத்தி, 11 லட்சம் டன்னாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம், கடந்த பருவத்தில், இதன் உற்பத்தி, 9-10 லட்சம் டன் என்றளவில் தான் இருந்தது.
சென்ற நிதியாண்டின், முதல் 10 மாதங்களில், மிளகாய் வற்றல் ஏற்றுமதி, 1 லட்சத்து 69 ஆயிரத்து 500 டன்னாக குறைந்துள்ளது. அதேசமயம், இதற்கு முந்தைய 2010-11ம் நிதியாண்டின் இதே காலத்தில், இதன் ஏற்றுமதி, 2 லட்சத்து 5 ஆயிரம் டன்னாக இருந்தது. இருப்பினும், இதே காலத்தில்,
மதிப்பின் அடிப்படையில், இதன் ஏற்றுமதி, 26 சதவீதம் உயர்ந்துள்ளது என, நறுமண பொருட்கள் வாரியம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மொத்த மிளகாய் வற்றல் உற்பத்தியில், ஏற்றுமதியின் பங்களிப்பு, 15-17 சதவீதம் என்றளவில் உள்ளது. உள்நாட்டில், விளையும் மொத்த மிளகாயில், பெரும்பகுதி, உள்நாட்டிலேயே பயன்படுத்தப்படுகிறது.இந்நிலையில், உள்நாட்டில் இதற்கான தேவை அதிகரிக்கவில்லை. இதனால் தான், இதன் விலை உயரவில்லை என கூறப்படுகிறது. உள்நாட்டில்காய் சாகுபடி செய்யும் பரப்பளவில், அதிக மாற்றம் இன்றி உள்ளது.
ஒட்டுமொத்த அளவில், உள்நாட்டு தேவையை விட, இதன் அளிப்பு, 30 சதவீதம் அதிகமாக உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)